கண்ணீர் மல்க ஸ்ரீராம ஜெயம் எழுதிய துர்கா ஸ்டாலின்: திருமண நாள் நெகிழ்ச்சி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, August 20, 2021

கண்ணீர் மல்க ஸ்ரீராம ஜெயம் எழுதிய துர்கா ஸ்டாலின்: திருமண நாள் நெகிழ்ச்சி!

கண்ணீர் மல்க ஸ்ரீராம ஜெயம் எழுதிய துர்கா ஸ்டாலின்: திருமண நாள் நெகிழ்ச்சி!



தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று திருமண நாள் என்பதால் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
திமுக இளைஞரணி செயலாளர், மேயர், சட்டமன்ற உறுப்பினர், கட்சியின் பொருளாளர், அமைச்சர், துணை முதலமைச்சர், முதலமைச்சர் என படிப்படியாக அரசியலில் உயர்ந்தவர் மு.க.ஸ்டாலின். அவருடைய கரடுமுரடான ஏற்ற இறக்கங்கள் கொண்ட அரசியல் பயணத்திலும், சொந்த வாழ்விலும் அவருக்கு பக்கபலமாக இருப்பவர் அவரது மனைவி துர்கா ஸ்டாலின்.

ஸ்டாலின் - துர்கா ஆகிய இருவருக்கும் கடந்த 1975ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி (இதே நாளில்) சென்னை அண்ணா சாலையில் உள்ள உம்மிடி பத்மாவதி திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. அப்போதைய திமுக பொதுச்செயலாளரும் கல்வி அமைச்சருமான நெடுஞ்செழியன் தலைமையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. அப்போதைய பொருளாளர் பேராசிரியர் க.அன்பழகன் முன்னிலை வகித்தார். அப்போதைய குடியரசுத் தலைவர் பக்ரூதின் அலி நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் - துர்கா ஸ்டாலின் தம்பதி இன்று தங்களது திருமண நாளை கொண்டாடுகின்றனர். இவர்களுக்கு திமுக தொண்டர்கள், நெட்டிசன்கள் உள்பட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதேசமயம், ஸ்டாலின், துர்கா தம்பதி பற்றிய சில சுவாரஸ்யமான சம்பவங்களையும் அவர்கள் பகிர்ந்துதிருமணமான அடுத்த 5 ஆவது மாதத்தில் கலைஞர் கருணாநிதி திமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டார். முதலில் அவர் எந்த சிறையில் இருக்கிறார் என்ற தகவல் கூட குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்படவில்லை. சிறையில் அவர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார் என்பதும் அனைவரும் அறிந்த விஷயமே. ஸ்டாலின் குடும்பத்துக்கு இத்தகைய அரசியல் புதிதல்ல என்றாலும், திருமணப் பயணத்தை பல கணவுகளோடு ஆரம்பித்த புது மணப்பெண் துர்காவுக்கு இது சற்றும் எதிர்பாராதது.
ஆனாலும், சற்றும் மனம் தளராத துர்கா ஸ்டாலின், அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையுடன் ஒரு நோட்டுப் புத்தகம் முழுவதும் ஸ்ரீராம ஜெயம் எழுதியபடி, தினமும் கிருஷ்ணர் கோயிலுக்கு சென்று கண்ணீர் மல்க பிரார்த்தணை செய்து வந்தார். அவரது வேண்டுதல் வீண்போகவில்லை ஸ்டாலின் மீண்டு வந்து தற்போது முதலமைச்சராகவும் உள்ளார். பகுத்தறிவு பாசறையில் இருந்து வந்த ஸ்டாலின், கடவுள் நம்பிக்கையற்றவர் என்றாலும், துர்கா அதீத கடவுள் பக்தி கொண்டவர். அவரது செயல்பாடுகளுக்கு ஸ்டாலின் தடை விதிப்பதில்லை என்பது இது அனைவருக்கும் தெரிந்த விஷயமே என்றாலும், ‘அவரும் நானும்’ என்ற தனது புத்தகத்தில் இதனை துர்கா ஸ்டாலினே கூறியுள்ளார்.

மேலும், தனது ஆசை, கனவு, லட்சியங்களை நிறைவேற்றுவதில், தனது கணவரின் பங்கு அளப்பரியது என்றும், அவரின் அரசியல் பயணத்தில் எப்போதும் பக்கபலமாகவும், உறுதுணையாகவும் இருப்பேன் என்றும் துர்கா ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன்333333333333333333333333333333333333333333 தெரிவித்தார். இதற்கு இரு மிகச் சிறந்த உதாரணம், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற தருணத்தில் துர்கா ஸ்டாலின் வெடித்து அழுததை இங்கு நினைவு கூரலாம்.

திருமண நாள் வாழ்த்துகள் முதல்வர் ஸ்டாலின் - துர்கா ஸ்டாலின்..!

No comments:

Post a Comment

Post Top Ad