விவசாயிகளுடன் ஒரு நாள்: எம்.எல்.ஏக்களை முடுக்கிவிடும் முதல்வர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, August 28, 2021

விவசாயிகளுடன் ஒரு நாள்: எம்.எல்.ஏக்களை முடுக்கிவிடும் முதல்வர்!

விவசாயிகளுடன் ஒரு நாள்: எம்.எல்.ஏக்களை முடுக்கிவிடும் முதல்வர்!

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் விவதமாக முதல்வரின் உத்தரவின் பேரில் விவசாயிகளுடன் ஒரு நாள் என்ற திட்டம் கொண்டு வரப்படுவதாக உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் கால்நடை, வேளாண் மற்றும் மீன்வளம் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று (ஆகஸ்ட் 28) நடைபெற்றது.

அவையில் பேசிய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், “கிராமங்களுக்கு சென்று விவசாயிகளின் குறைகளை கேட்க 'விவசாயிகளுடன் ஒருநாள் திட்டம்' செயல்படுத்தப்படும்” என்று கூறினார்.

மேலும் அவர், “அதாவது மாதம் ஒரு நாள் அனைத்து எம்எல்ஏக்களும் கிராமங்களுக்கு சென்று விவசாயிகளின் கருத்துக்களை கேட்க வேண்டும் என்றும் ஓராண்டில் 2,500 கிராமங்களுக்கு செல்ல வேண்டும் என முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


*காளான் உற்பத்தி கூடம் அமைக்க 100 மகளிருக்கு ஒரு கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும்.

*கரூர், நாகை, சிவகங்கையில் 30 கோடி ரூபாயில் அரசு வேளாண்மை கல்லூரிகள் அமைக்கப்படும்.

*நெல் உற்பத்தியை உயர்த்த 25 ஆயிரம் ஏக்கரில் துத்தநாக சல்பேட்டும், ஜிப்சமும் 50% மானியத்தில் வழங்கப்படும்.

*தருமபுரி, கடலூர், ராணிப்பேட்டை, திருவாரூரில் 4 அங்கமாக உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உருவாக்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad