ரயில் கட்டணம் குறைவு; பயணிகளுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு!
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக இந்தியன் ரயில்வே விளங்குகிறது. ஆண்டுதோறும் 800 கோடிக்கும் அதிகமான மக்கள் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். 121 கோடி டன் சரக்குகள்
இடம்பெயர ரயில்கள் உதவுகின்றன. பயணிகளின் வசதிக்காக புறநகர் ரயில்கள், பேசஞ்சர், மெயில், எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் என பல்வேறு வகையான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
மகிழ்ச்சியான பயணம்
சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் மத்திய ரயில்வேத்துறை அமைச்சராக அஷ்வினி வைஷ்ணவ் பொறுப்பேற்றுக் கொண்டார். பயணிகளின் வசதிக்காக பல்வேறு வசதிகளை இந்திய ரயில்வே அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் புதிதாக ’ஏசி 3 டயர் எகானமி’ வகுப்பு பெட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குறைந்த கட்டணத்தில் மகிழ்ச்சியான பயணத்தை உறுதி செய்யும் நோக்கில் இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய
பெட்டிகள் அறிமுகம்
இந்த பெட்டியில் மொத்தம் 83 படுக்கைகள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இவை அனைத்து மெயில், எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் பாஸ்ட் ரயில்களிலும் இணைக்கப்படும். தற்போது வரை பல்வேறு ரயில்வே மண்டலங்களுக்கு 50 ’ஏசி 3 டயர் எகானமி’ வகுப்பு பெட்டிகள் அளிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதிய பெட்டிகள் அறிமுகம்
இந்த பெட்டியில் மொத்தம் 83 படுக்கைகள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இவை அனைத்து மெயில், எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் பாஸ்ட் ரயில்களிலும் இணைக்கப்படும். தற்போது வரை பல்வேறு ரயில்வே மண்டலங்களுக்கு 50 ’ஏசி 3 டயர் எகானமி’ வகுப்பு பெட்டிகள் அளிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment