போக்குவரத்து துறையிலும் ஊழல்: சிக்கப் போவது யார்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, August 21, 2021

போக்குவரத்து துறையிலும் ஊழல்: சிக்கப் போவது யார்?

போக்குவரத்து துறையிலும் ஊழல்: சிக்கப் போவது யார்?

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழத்தில் நான்காயிரம் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் புதிய பேருந்து வழித்தடங்களை சட்ட அமைச்சர் ரகுபதி, போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர், அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் நான்காயிரம் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்கப்படும். புதிய மினி பஸ் இயக்க பரிசீலனை மேற்கொள்ளப்படும். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது விசாரணை போட்டாலே ஓடி ஒளிகிறார்கள். மடியில் கனமில்லை என்றால் அவர்கள் ஏன் கூக்குரல் போடுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி எப்படி முதலமைச்சர் ஆனார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

கடந்த காலத்தில் போக்குவரத்து துறையின் முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்யப்படும். குடிசை மாற்றுவாரிய கட்டடத்தை தொட்டாலே சிமெண்ட் கொட்டுகின்றது. இப்படி கடந்த அதிமுக அரசின் அனைத்து திட்டப்பணிகளும் முறையாக நடைபெறவில்லை” என்று ராஜகண்ணப்பன் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad