சசிகலா என்ட்ரி; எடப்பாடி எக்ஸிட்? நள்ளிரவில் நடைபெற்ற ஆலோசனை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, August 27, 2021

சசிகலா என்ட்ரி; எடப்பாடி எக்ஸிட்? நள்ளிரவில் நடைபெற்ற ஆலோசனை!

சசிகலா என்ட்ரி; எடப்பாடி எக்ஸிட்? நள்ளிரவில் நடைபெற்ற ஆலோசனை!

ஆட்சியில் இருந்தாலும் எதிர்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தாலும் ஜெயலலிதா நினைத்துவிட்டால் கொடநாடு பறந்துவிடுவார். பெரிய எஸ்டேட், பிரம்மாண்ட பங்களா, பாதுகாப்புக்கு பல பேர், சொகுசு வசதிகள் என கொடநாட்டில் தான் ஓய்வு எடுப்பார். அவருடன் உடன்பிறவா சகோதரி சசிகலாவும் உடனிருப்பார்.
அந்த பங்களாவில் என்னென்ன இருந்தது, இருக்கிறது என்பது இப்போதுவரை மர்மமாகவே இருக்கிறது. ஜெயலலிதா மறைந்த பின்னர், சசிகலா சிறை சென்ற பின்னர், அங்கு நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் நடந்து நான்கு வருடங்கள் கடந்துவிட்டது.

அந்த வழக்கில் விசாரணை முடியும் தருவாயில், அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்து திமுக ஆட்சி பொறுப்பேற்றது. ஏற்கெனவே திமுக அறிவித்தபடி அவ்வழக்கில் கூடுதல் விசாரணை நடத்த தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. அதற்கு தமிழக சட்டமன்றத்தில் எடப்பாடிபழனிசாமி எதிர்ப்பு தெரிவித்தார், அதிமுக வெளிநடப்பு செய்தது. ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் ஆளுநருடன் சந்தித்துப் பேசினர். சட்டமன்றத்தில் காங்கிரஸ் செல்வப்பெருந்தகை கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்த கொலை, கொள்ளை வழக்கு சம்மந்தமாக இன்று ஒரேநாளில் சென்னை உயர் நீதிமன்றத்திலும், ஊட்டியிலும் இரு வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன.

இந்த சூழலில் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி சசிகலா இதுகுறித்து தனது தி.நகர் அபிபுல்லா சாலை வீட்டில் ஆலோசனைநடத்தியுள்ளார். அப்போது டிடிவி தினகரன், இளவரசி, விவேக், நடராஜனின் சகோதரர், வழக்கறிஞர் உள்ளிட்டோரிடம் இரவு நெடுநேரம் ஆலோசனை நடத்தியுள்ளார்.

கொடநாட்டில் என்னென்ன பொருள்கள், ஆவணங்கள் இருந்தன என்பது சசிகலாவுக்கு மட்டுமே தெரியும். இந்த விவகாரம் வெளிவந்ததிலிருந்து எடப்பாடி பழனிசாமி டென்ஷனாக உள்ளார். இதை பயன்படுத்தி கட்சிக்குள் நுழையவும், இந்த விவகாரம் குறித்து தொலைக்காட்சியில் நீண்ட நேர்காணல் தரவும் சசிகலா திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad