மாநகராட்சியாக தரம் உயர்ந்தது தாம்பரம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 24, 2021

மாநகராட்சியாக தரம் உயர்ந்தது தாம்பரம்!

மாநகராட்சியாக தரம் உயர்ந்தது தாம்பரம்!

தமிழக சட்டமன்றத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதில் முக்கிய அறிவிப்பாக தாம்பரம் உள்ளிட்ட 6 புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார்.
இதுதொடர்பாக அவர் அவையில் மேலும் பேசும்போது, "தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பேரூராட்சிகள், ஊராட்சிகளை ஒன்றிணைத்து தாம்பரம் மாநகராட்சியாக அறிவிக்கப்படும்.

இதேபோன்று சிவகாசி. கரூர், கடலூர், காஞ்சிபுரம், கும்பகோணம் ஆகிய நகராட்சிகள், அதனை சுற்றியுள்ள வளர்ச்சி அடைந்த உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்" என்று அமைச்சர் அறிவித்தார்.

சென்னை, கோவை, மதுரை, நெல்லை உள்பட தமிழகத்தில் இதுவரை 16 மாநகராட்சிகள் உள்ளன. தற்போது புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ஆறு மாநகராட்சிகளையும் சேர்த்து தமிழகத்தில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 21 ஆக உயருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad