தமிழக கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும்; முக்கியத் தகவல் சொன்ன அமைச்சர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, August 29, 2021

தமிழக கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும்; முக்கியத் தகவல் சொன்ன அமைச்சர்!

தமிழக கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும்; முக்கியத் தகவல் சொன்ன அமைச்சர்!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்திருப்பதை அடுத்து, பள்ளி, கல்லூரிகளை திறக்க மாநில அரசு திட்டமிட்டது. இதுதொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில், வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 50 சதவீத மாணவர்கள் என்ற வகையில் சுழற்சி முறையில் மாணவர்களை வரவழைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நெறிமுறைகள் வெளியீடு

பள்ளிகளைப் பொறுத்தவரை 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தடுப்பூசி முகாம்கள் தொடக்கம்

வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி கல்லூரிகள் திறக்கப்படவுள்ள நிலையில், கல்லூரி மாணவர்கள் அனைவரும் சரியான முறையில் தடுப்பூசி முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை நந்தனம் அரசு ஆண்கள் கலைக் கல்லூரியில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,

100 சதவீதம் உறுதி

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தற்போதைய சூழலில் 90 சதவீத ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

வரும் செப்டம்பர் மாதத்திற்குள் 18 வயது நிரம்பிய கல்லூரி மாணவர்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி போட்டு முடிக்கப்படும். இதையொட்டி தமிழகத்தின் அனைத்து கல்லூரிகளிலும் தடுப்பூசி முகாம்கள் தொடங்கப்படும். இதுதொடர்பாக அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் சுகாதாரத்துறை செயலாளர் தகவல் தெரிவிப்பார் எனக் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad