கொடநாடு வழக்கில் திடீர் திருப்பம்: உயர் நீதிமன்றத்தில் புதிய மனு - ஈபிஎஸ், சசிகலாவுக்கு சிக்கல்!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. கடந்த 13ஆம் தேதி கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை முதலில் இருந்தே விசாரிக்க வேண்டும் என அரசு தரப்பில்
மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றமும் அதற்கு அனுமதியளிக்க சயனிடம் காவல்துறையினர் சில தினங்களுக்கு முன்னர் ரகசிய விசாரணை நடத்தினர்.
நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத், குன்னூர் டி.எஸ்.பி சுரேஷ், கோத்தகிரி காவல் ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோரிடம் சயான் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் வாக்குமூலம் அளித்திருக்கிறார். சயானின் ரகசிய வாக்குமூலம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்த வழக்கில் தன்னை சேர்க்க முயற்சிகள் நடப்பதாக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் விசாரணைகள் நடக்கவில்லை. உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரும் நடவடிக்கையே என்று
முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த நிலையில், சயான் அளித்துள்ள ரகசிய வாக்குமூலம் 27ஆம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முக்கியப் பிரமுகர்கள் சிக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஈபிஎஸ், சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க கோரி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தீபு, சதீசன், சந்தோஷ்சாமி ஆகியோர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர்களது வழக்கறிஞர் கே.விஜயன் கூறுகையில், இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் எட்பபாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், முன்னாள் நீலகிரி மாவட்ட ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்.பி., முரளிரம்பா, சஜ்ஜீவன் ஆகியோரை சாட்சியாக விசாரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தோம். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து
சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
எஸ்டேட் மேலாளர் நடராஜன், மின்வாரிய அதிகாரி மற்றும் தடயவியல் நிபுணரை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என்று தெரிவித்துள்ள அவர், இதேபோன்று சாட்சிகளாகச் சேர்க்கப்பட்ட 103 பேரிடமும் விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கில் முழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment