சாப்பிடும் போது கைது: ஒன்றிய அமைச்சருக்கு வந்த சோதனை!
மஹாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே குறித்து அவதூறாகப் பேசிய விவகாரத்தில், ஒன்றிய கேபினட் அமைச்சர் நாராயண் ரானேவை, சாப்பிடும் போது போலீசார் கைது செய்துள்ளனர்.
அண்மையில், மஹாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய, பா.ஜ.க.,வைச் சேர்ந்த ஒன்றிய
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சர் நாராயண் ரானே, எத்தனையாவது சுதந்திர தினம் கொண்டாடுகிறோம் என்பது கூட, மஹாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிற்கு தெரியவில்லை. அதை கூட பாதுகாவலர்களிடம் கேட்கிறார். நான் மட்டும் அங்கிருந்தால் அவரை கன்னத்தில் அறைந்திருப்பேன் என பேசினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் ஆத்திரமடைந்த சிவசேனா கட்சித் தொண்டர்கள், ஒன்றிய கேபினட் அமைச்சர் நாராயண் ரானேவிற்கு எதிராக போராட்டம் நடத்தினர். மேலும், மும்பையில் உள்ள பா.ஜ.க., அலுவலகத்தை சிவசேனா
கட்சித் தொண்டர்கள் சூறையாடினர். இது தொடர்பாக, சிவசேனா கட்சியினர் போலீசில் புகார் அளித்தனர்.
கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க, மும்பை உயர் நீதிமன்றத்தில், ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானே தாக்கல் வழக்கை நீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க மறுத்து விட்டது. இதை அடுத்து இன்று பிற்பகல், ரத்னகரி மாவட்டத்தில், ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானே போலீசார் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர்.
No comments:
Post a Comment