தலிபான்களுடன் அமெரிக்க உளவு துறை தலைவர் ரகசிய சந்திப்பு!
அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ., தலைவர் வில்லியம் பர்ன்ஸ், காபூலில், தலிபான் அமைப்பின் துணைத் தலைவர் முல்லா அப்துல் கனி பரதரை ரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக
தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி உள்ளனர். தலிபான் ஆட்சிக்கு பயந்து, ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற முயற்சித்து வருகின்றனர். அமெரிக்கா, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் காபூலில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை விமானத்தை அனுப்பி மீட்டு வருகின்றன.
ஆப்கானிஸ்தானில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெறுவதற்கு ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி காலக்கெடுவாக
அமெரிக்கா நிர்ணயித்துள்ளது. அதற்குள் ராணுவ வீரர்கள் மட்டுமின்றி தங்கள் நாட்டு குடிமக்களையும் அழைத்து வந்து விட வேண்டும் என்ற இலக்குடன் அமெரிக்கா செயல்படுகிறது.
ஆனால் அந்த தேதியை தள்ளிப்போட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு உலக நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. அதேசமயம் தலிபான்கள் முன்கூட்டியே தாக்குதல் தொடுக்கக்கூடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment