இதையும் விட்டு வைக்காத கொரோனா; லிஸ்ட் ரொம்ப பெரிசா போகுதே!
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆட்டம் காட்டி வருகிறது. மனிதர்களை தாண்டி சிங்கம், புலி, நாய் உள்ளிட்ட விலங்குகளுக்கும் நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்முறை மான்களுக்கும் கோவிட்-19 தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனை அமெரிக்க அரசு நேற்றைய தினம் உறுதி செய்துள்ளது.
இதன்மூலம் கொரோனா பாதிப்பிற்கு ஆளான விலங்குகள் பட்டியல் மேலும் நீண்டுள்ளது.
அதிகாரப்பூர்வ செய்தி
அதாவது, ஓஹியோ மாகாணத்தை சேர்ந்த வெள்ளை நிற வால் கொண்ட மான்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக அமெரிக்க விவசாயத்துறை (USDA) அதிகாரப்பூர்வ செய்தி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்த USDA செய்தித்தொடர்பாளர் லிண்ட்சே கோலே, மானுக்கு கொரோனா பாதிப்பு எப்படி ஏற்பட்டது என்று சரியாகத் தெரியவில்லை.
விலங்குகளுக்கும் கொரோனா
பொதுமக்கள் மூலமாகவோ, சுற்றுச்சூழல் அல்லது பிற விலங்குகள் மூலமாகவோ பரவியிருக்கலாம் என்று தெரிவித்தார்.
முன்னதாக நாய், பூனை, புலி, சிங்கம், சிறுத்தை புலி, கொரில்லா, மிங்குகள் உள்ளிட்ட விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதை அமெரிக்க விவசாயத்துறை கண்டறிந்தது.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இவை பெரும்பாலும் பொதுமக்களுடன் தொடர்பில் இருந்ததன் விளைவாக தொற்றுக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் இல்லினாய்ஸ், மிச்சிகன், நியூயார்க், பென்சில்வேனியா ஆகிய நகரங்களில் வாழும் வெள்ளை நிற வால் கொண்ட மான்களிடம் இருந்து கொரோனாவிற்கான ஆன்டிபாடி தேவைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
No comments:
Post a Comment