'அமைச்சர் சேகர்பாபுவா?'... அனைத்து சாதியினர் அர்ச்சகர் குறித்து கேள்வி கேட்ட நபர், பதில் அளிக்கும் அமைச்சர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 17, 2021

'அமைச்சர் சேகர்பாபுவா?'... அனைத்து சாதியினர் அர்ச்சகர் குறித்து கேள்வி கேட்ட நபர், பதில் அளிக்கும் அமைச்சர்!

'அமைச்சர் சேகர்பாபுவா?'... அனைத்து சாதியினர் அர்ச்சகர் குறித்து கேள்வி கேட்ட நபர், பதில் அளிக்கும் அமைச்சர்!

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், கடந்த 14ம் தேதி ஆகம விதிகளில் பயிற்சிபெற்ற தலித் மாணவர்கள் இருவர் உட்பட 58 பேரை அர்ச்சகர்களாக நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணியானை வழங்கினார். அந்த 58 பேரில் 24 பேர் அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியிகளிலும், 34 பேர் தனியார் அர்ச்சகர் பயிற்சி நிறுவனங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள்.
மேலும், பணியானை பெற்றவர்களில் பட்டியல் பிரிவில் 5 பேர், எம்பிசி 6, பிற்படுத்தப்பட்டோர் 12 மற்றும் பொதுப்பிரிவை சேர்ந்தவர் 1. தவிர, பெண் ஓதுவார் ஒருவர் ஆவர். இந்த சிறப்பு வாய்ந்த திட்டத்திற்கு வரவேற்புகள் வந்த வண்ணம் இருந்தாலும், கோயில்களில் ஒருவரது வேலையை பறித்து மற்றவருக்கு வேலை கிடைக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் புகார்கள் எழுந்தன.
அதன் தொடர்ச்சியாக சட்ட மன்றத்திலும் எதிர்க்கட்சி தரப்பில் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோவில்களில் யாரையும் பணி நீக்கம் செய்யவில்லை; செய்யவும் மாட்டோம், இவ்விவகாரத்தில் வீணான வதந்திகளை உருவாக்கி, அரசியல் செய்து சமூக நீதியை பாழடிக்க வேண்டாம்''என்று கூறினார்.
அவரை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினும் இதற்கு விளக்கமளித்தார். இந்த நிலையில், மேற்கண்ட கேள்விகளை அமைச்சர் சேகர் பாபுவிடம் செல்போன் மூலமாக கேட்டு விளக்கம் பெற்ற இந்து அமைப்பைச் சேர்ந்த ஒருவரது ஆடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதனை இந்த செய்தியில் இணைத்துள்ளோம்.

No comments:

Post a Comment

Post Top Ad