தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு: சபாநாயகர் அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 17, 2021

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு: சபாநாயகர் அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு: சபாநாயகர் அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 13ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து 14ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 2021-2022ஆம் நிதி ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கை ஆகியவற்றின் மீதான பொது விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. வருகிற 23ஆம் தேதி முதல் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.

முன்னதாக, ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் வருகிற செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி வரை மொத்தம் 29 நாட்களுக்கு கூட்டத்தொடரை நடத்துவது என்று அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், தமிழகத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா இடங்களில் ஒரு இடத்துக்கான தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க திட்டமிட்டு, சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முன்கூட்டியே செப்டம்பர் 13ஆம் தேதி நிறைவுபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். பல்வேறு துறைகள் மீதான விவாத நாட்கள் இதற்கேற்ப மாற்றியமைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரம் விரைவில் வெளியாகும்.

No comments:

Post a Comment

Post Top Ad