"என்னை சந்திக்க வராதீங்க!" - தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்!
பிறந்த நாளன்று தன்னை சந்திக்க தொண்டர்கள் யாரும் நேரில் வர வேண்டாம் என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தே.மு.தி.க.,
தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாள் வரும் 25ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல உள்ளதாகவும், எனவே, பிறந்த நாளன்று தன்னை நேரில் சந்திக்க தொண்டர்கள் வர வேண்டாம் என்றும் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, சமூக வலைதளமான ட்விட்டரில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2005ம் ஆண்டு கழகம் தொடங்கப்பட்ட பிறகு 2006ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் எனது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கடைப்பிடித்து வருகிறோம். "இயன்றதை செய்வோம் இல்லாதவருக்கு” என்ற கொள்கை முழக்கத்தோடு தொடர்ந்து ஒவ்வொரு
ஆண்டும் மக்களுக்கான பல உதவிகளை செய்து வருகிறோம்.
தமிழகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா பரவல் தற்போது தான் குறைந்து வரும் நிலையில் பெருங்கூட்டம் கூடினால் தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளது. எனவே அனைவரின் நலன் கருதி எனது பிறந்த நாளன்று தொண்டர்கள் யாரும் என்னை நேரில் சந்திக்க வரவேண்டாம்.
No comments:
Post a Comment