பள்ளிகளைத் திறக்கும் நேரம் சரியா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 23, 2021

பள்ளிகளைத் திறக்கும் நேரம் சரியா?

பள்ளிகளைத் திறக்கும் நேரம் சரியா?

தமிழ்நாட்டில் செப்டம்பர் முதல் தேதியிலிருந்து 9 முதல் 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளி தொடங்குவதாக அரசு அறிவித்துள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் காலத்தில்தான் மூன்றாவது அலையும் எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் மாதத்தில் உருவாகக்கூடிய மூன்றாவது அலை அக்டோபரில் உச்சம் தொடும் என்று செய்திகள் வருகின்றன.

எல்லோருக்கும் ஒன்றல்ல

கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பள்ளிகள் திறக்கவில்லை. மாணவர்களுக்கு இணைய வழியில்தான் பாடங்கள் நடக்கின்றன. இணைய வழிப் பாடங்களில் எல்லா மாணவர்களாலும் எல்லா ஆசிரியர்களாலும் ஒரே விதமாகப் பொருந்திப்போக முடியாது என்பது தெரிந்ததுதான். இணைய வழிப் பாடம் என்னும் கற்றல் முறையின் தன்மை சிலருக்கு எளிதாகப் பொருந்திவிடும். சிலருக்கு அப்படிப் பொருந்தாது. இதைவிடவும் முக்கியமான விஷயம், இணையத் தொடர்பு எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்காது. சிறந்த இணைப்பு என்பது அதற்காக ஒருவர் செலவழிக்கும் பணம், அவர் இருக்கும் இடம் போன்றவற்றையும் பொருத்தது. அதிகப் பனம் செலவழித்து வைஃபை தொடர்பு வைத்திருப்பவர்களும் கைபேசியின் மூலம் மட்டுமே இணையத் தொடர்பு பெறுபவர்களும் ஒன்றுபோல இணையத் தொடர்பின் வசதியைப் பெற முடியாது. சேவை நிறுவனங்களின் திறனில் இருக்கும் வேறுபாடுகளும் பயனர்களைப் பாதிக்கும்.

தொடர்புச் சிக்கல்கள் இவ்வாறு இருக்க, ஸ்மார்ட் போன் என்னும் திறன்பேசி இல்லாதவர்களின் நிலையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். இன்று எல்லாரிடத்திலும் திறன்பேசிகள் இருக்கின்றன என்று பொதுவாகச் சொல்லப்படுவதுண்டு. ஆனால், இது பொதுப்படையான கருத்து மட்டுமே. திறன்பேசி இல்லாதவர்கள் அல்லது போதிய திறன் அற்ற திறன்பேசி இல்லாதவர்கள் கணிசமான அளவில் இருக்கிறார்கள்.

இவை அனைத்தும் சேர்ந்து இணைய வழிக் கல்வியைப் பெறுபவர்களிடத்தில் பெரும் வேற்றுமைகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாகச் சொல்வதானால், வசதி படைத்தவர்களுக்கும் வசதி அற்றோருக்கும் இந்தப் பொது முடக்கக் காலம் என்பது ஒன்றல்ல. அது கல்விக்கும் பொருந்தும். மேலும் குறிப்பாகச் சொல்வதானால், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பலரால் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக இணைய வழிக் கல்வியில் ஈடுபடவோ பயபடவோ முடியாது என்பதே யதார்த்தம். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர்களுக்குக் கல்வி என்பது வெறும் பெயருக்குத்தான் என்றுகூடச் சொல்லிவிடலாம். இந்நிலையில் பள்ளிகள் மீண்டும் திறப்பது இந்த மாணவர்களின் கல்விக்கு மிக மிக அவசியமானது என்பதில் எந்த ஐயமும் இல்லை.

மாணவர்களின் மனநலன்
schools repon (4).
இணைய வழிக் கல்வியின் மூலம் முறையான கல்வியில் ஒரு சிறிய அளவைக்கூடப் பெற முடியாமல் இருக்கும் மாணவர்கள் கணிசமாக இருக்கும் அதே நேரத்தில் எல்லா மாணவர்களுக்கும் பொதுவான சிக்கலும் இதில் உள்ளது. மாணவர்களின் மனநலம் குறித்த சிக்கல் அது. கொரோனா காலத்தில் மாணவர்களின் மனநலம் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த பாதிப்பு என்பது வெளிப்படையாகத் தெரியக்கூடியதாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை. பள்ளிக் குழந்தைகள் ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளாக வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கிறார்கள். பொது முடக்கம் தளர்த்தப்பட்டுள்ளபோதும் கூட்டம் கூடும் இடங்களுக்குப் போகக் கூடாது என்பதால் அவர்கள் வெளியில் செல்வதற்கான இடங்கள் சுருங்கிவிட்டன.

பொதுவாகவே வெளிப்புற விளையாட்டுக்கள் குறைந்துவிட்ட இந்தக் காலத்தில் கொரோனா அதை மேலும் குறைத்துவிட்டது. விளையாட்டு, திரைப்படம், சந்தைக்குச் செல்லுதல், நண்பர்களைச் சந்தித்தல், பொது விழாக்களில் பெற்றோருடன் சென்று வருதல், குடும்பத்துடனான வெளியூர்ப் பயணம் என்று பல விதங்களிலும் அவர்கள் நடமாட்டம் முடங்கியுள்ளது. இத்தகைய முடக்கம் குழந்தைகளுக்குக் கடுமையான மனச்சோர்வையும் மன உளைச்சலையும் தரக்கூடியது. வீட்டிற்குள் அடைந்து கிடப்பது அவர்களது வழக்கமான உற்சாகத்தைக் குலைத்திருக்கக்கூடும். இதனால் ஏற்படக்குடிய மனநலப் பிரச்சினைகள் உட்னடியாகவோ சிறிது காலம் கழித்தோ தெரியலாம். இந்தக் காலகட்டத்தில் குழந்தைகளிடமிருந்து வெளிப்படும் அதீதமான உணர்ச்சிகளுக்கு உரிய கவனம் கொடுக்கப்பட வேண்டும் என்று மனநல மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்கள் இரண்டு விதங்களிலும் பாதிக்கப்படுகிறார்கள். ஒன்று, எல்லோருக்கும் இருக்கும் மனநலப் பிரச்சினைகள். இரண்டாவது இவர்களுக்கு மட்டுமே இருக்கும் இணையத் தொடர்புக்கான பொருளாதாரச் சிக்கல். ஆகவே பள்ளிகள் திறப்பதுதான் எல்லா மாணவர்களுக்கும், குறிப்பாகப் பொருளாதார அளவில் பின்தங்கிய நிலையில் இருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களில் பலருக்கும் நல்லது.
இணையவழி வகுப்புகள் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று படிப்பதற்கு ஒருபோதும் சரியான மாற்று ஆகாது. எல்லோருக்கும் சமமான முறையில் அது சாத்தியம் ஆகாது என்பதுடன் மனநலச் சிக்கல்களையும் ஏற்படுத்திவிடும். இது இன்னும் ஓராண்டிற்குத் தொடர்ந்தால் பல மாணவர்களின் கல்வித் தரம் கடுமையாகப் பாதிக்கப்படும். அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் பற்றிய விமர்சனங்கள் ஏற்கனவே அதிகமாக இருக்கும் சூழலில் இது மேலும் அதிகரிக்கும். எனவே பள்ளிகளைத் திறப்பதே நல்லது.

விலகாத அபாயம்
schools repon (3).

எனினும், கொரோனா தொற்று அபாயம் இன்னமும் முற்றிலும் விலகாத நிலை இருப்பதையும் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் ஆக வேண்டும். தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டவர்களில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கிக்கொண்டிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. கடந்த சில நாட்களாகத் தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குத் தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் ஆகஸ்ட் இறுதியிலோ செப்டம்பர் ஆரம்பத்திலோ கொரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலை தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பு மருந்து செலுத்திக்கொள்ளாத 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு இதனால் ஏற்படக்கூடிய ஆபத்தைத் தடுக்க நாம் என்ன செய்யப்போகிறோம்?

18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மிகச் சில தடுப்பூசிகளில் மட்டுமே பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனம் 12-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் தடுப்பூசிப் பரிசோதனைகளை நடத்துவதற்குத் தன்னார்வலர்களை நியமித்துள்ளது. எனினும், அதன் முடிவுகள் வருவதற்குச் சில மாதங்கள் ஆகும். இந்நிலையில் 18 வயதுக்குக் கீழே உள்ள மாண்வர்களின்

No comments:

Post a Comment

Post Top Ad