சபரிமலை பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்! இன்னும் ஒரு வாரத்துக்கு வாய்ப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 16, 2021

சபரிமலை பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்! இன்னும் ஒரு வாரத்துக்கு வாய்ப்பு!

சபரிமலை பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்! இன்னும் ஒரு வாரத்துக்கு வாய்ப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆவணி மாதம் மற்றும் ஓண பூஜைகளுக்காக நேற்று நடை திறக்கப்பட்டது. இன்று நிறை புத்தரிசி பூஜை நடைபெறுகிறது. தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
கொரோனா பரவலின் இரண்டாவது அலை தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் குறைந்தாலும் கேரளாவில் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் கடந்த சில மாதங்களாகவே சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடும் நிபந்தனைகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நேற்று மாலை (ஆகஸ் 15) திறக்கப்பட்டது. தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 16) முதல் 23ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். 19ஆம் தேதி முதல் ஓணம் சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன. பின்னர் 23ஆம் தேதி இரவு நடை சாத்தப்படும்.

இதனால் சபரிமலையில் இந்தமுறை 8 நாட்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய முடியும். இந்த நாட்களில் தினமும் 15 ஆயிரம் பக்தர்களை மட்டுமே அனுமதிக்க தேவசம் போர்டு தீர்மானித்துள்ளது. இந்த முறையும் ஏற்கனவே உள்ள ஆன் லைன் முன்பதிவு மற்றும் 2 தவணை கொரோனா தடுப்பூசி அல்லது ஆர்டிபிசிஆர் நெகட்டிங் சான்றிதழ் விதிமுறைபடியே தரிசனம் செய்ய முடியும்.

No comments:

Post a Comment

Post Top Ad