டாஸ்மாக் மதுபான விலை உயர்வு: நாளை முதல் தமிழகத்தில் அமல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 31, 2021

டாஸ்மாக் மதுபான விலை உயர்வு: நாளை முதல் தமிழகத்தில் அமல்!

டாஸ்மாக் மதுபான விலை உயர்வு: நாளை முதல் தமிழகத்தில் அமல்!

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (Tamil Nadu State Marketing Corporation) தமிழகத்தில் மது வகைகளை வர்த்தகம் செய்யும் அரசு நிறுவனம். இந்நிறுவனம் தமிழகத்தில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்ய ஏகபோக உரிமை பெற்றுள்ளது. தமிழக அரசின் வருவாய் ஈட்டும் முக்கிய காரணியாக டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது.

மது வகைகள் மீதான ஆயத்தீர்வை மற்றும் மதிப்பு கூட்டு வரி வாயிலாக தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கிறது. அரசுக்கு எப்போதும் லாபம் ஈட்டும் நிறுவனமாக இருக்கும் டாஸ்மாக் கடைகள் கொரோனா காலகட்டத்தில் சில நாட்களுக்கே மூடப்பட்டாலும் அரசுக்கு கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை ரூ.10 முதல் ரூ.500 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு செப்டம்பர் 1ஆம் தேதி (நாளை) முதல் அமலுக்கு வரவுள்ளதாக டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்மூலம், ஜானி வாக்கர் டபுள் பிளேக் விஸ்கி 750 எம்.எல் ரூ.4,740ல் இருந்து ரூ.5,260ஆக உயர்கிறது. இறக்குமதி மதுபானங்களின் அதிக விலை கொண்ட ஜானி வாக்கர் புளூ லேபிள் விஸ்கி ரூ.21,130ல் இருந்து ரூ.21,300ஆக உயர்கிறது. இதேபோல் பலவகையான சரக்கு வகைகளின் விலையும் உயர்கிறது.

No comments:

Post a Comment

Post Top Ad