பள்ளிகள் திறப்பு... மாணவர்களுக்கு அமைச்சர் சொன்ன செம ஹேப்பி நியூஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 31, 2021

பள்ளிகள் திறப்பு... மாணவர்களுக்கு அமைச்சர் சொன்ன செம ஹேப்பி நியூஸ்!

பள்ளிகள் திறப்பு... மாணவர்களுக்கு அமைச்சர் சொன்ன செம ஹேப்பி நியூஸ்!

தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வில்லிங்டன் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பாதுகாப்பான முறையில் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட வாரியாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தேவையான தடுப்பு உபகரணங்கள் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து வகுப்புகள், பள்ளி வளாகங்களில் முகக்கவசங்கள், கிருமிநாசினி திரவங்கள் அனைத்தும் தேவையான அளவிற்கு வைத்திருக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தொற்று பரவல் குறித்து எந்தவித அச்சமும்பட தேவையில்லை. பள்ளிகள் திறக்கப்பட்டாலும் இணையதளம் வாயிலாக வகுப்புகள் நடைபெறுவதில் எந்த தடையும் இருக்காது.
மாணவர்களை பள்ளிக்கு செல்வதை விரும்பும் அளவிற்கு உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. மாணவர்களை மிகவும் மகிழ்ச்சியான முறையில் ஆசிரியர்கள் வழிநடத்த வேண்டும். 95 சதவிகிதம் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் 100% பேர் விரைவில் தடுப்பூசி போட்டு கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாளை 9 முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பாதுகாப்பான முறையில் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற தலைமை ஆசிரியர்கள், முதன்ம ை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும். பெற்றோருக்கு அவர்களின் பிள்ளைகள் மீதுள்ள அக்கறையை போன்றே இந்த அரசுக்கும் மாணவர்கள் மீது அக்கறை உள்ளது.

40 மாணவர்கள் ஒரு வகுப்பறையில் இருக்கிற பட்சத்தில் 20 பேர் ஒரு வகுப்பறையில் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். விளையாட்டு பாட வேலை இல்லை என்பதையும் கூறியுள்ளோம். 800 மருத்துவர்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ ஆலோசனை, உதவி தேவைப்படும் பட்சத்தில், அவர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக 800 மருத்துவர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து பள்ளிகளிலும் ணவர்களுக்கு உடல் வெப்பநிலையை தினமும் பரிசோதித்து அதனை பதிவிட வேண்டும். பள்ளிகள் திறந்து 40 லிருந்து 45 நாட்கள் வரை , உளவியல் சிக்கல்களை போக்கும் வகையிலான பயிற்சிகளே மாணவர்களுக்கு அளிக்கப்பட உள்ளது. பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. போட்டி தேர்வுகளை கருத்தில் கொண்டே பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது என்று அன்பில் மகேஷ் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad