செத்து போனவங்களுக்கு இப்படி பண்றதே திமுகவுக்கு வேலையா போச்சு - எச். ராஜா ஆத்திரம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 31, 2021

செத்து போனவங்களுக்கு இப்படி பண்றதே திமுகவுக்கு வேலையா போச்சு - எச். ராஜா ஆத்திரம்

செத்து போனவங்களுக்கு இப்படி பண்றதே திமுகவுக்கு வேலையா போச்சு - எச். ராஜா ஆத்திரம்

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் விதி 110-ன்கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். கடந்த 24 ஆம் தேதி நடந்த சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர், கலைஞர் ஆற்றிய அரும்பணிகளைப் போற்றும் விதமாக, அவரது வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை மக்களும், வருங்காலத் தலைமுறையும் அறியக்கூடிய வகையில், நவீன விளக்கப்
படங்களுடன் சென்னை, காமராஜர் சாலை, அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 39 கோடி மதிப்பீட்டில் முத்தமிழறிஞர் கலைஞருக்கு நினைவிடம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

இதற்கு எதிர்க்கட்சி துணை தலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் வரவேற்றார். ''மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்படுவதை முழுமனதுடன் அதிமுக வரவேற்கிறது என்று கூறிய ஓபிஎஸ், 50 ஆண்டு எம்எல்ஏவாக இருந்த கருணாநிதி தமிழகத்திற்காக பல சிறப்பு சட்டங்களை கொண்டுவந்தவர்'' என்று புகழ்ந்து பேசினார்.

இந்த நிலையில், மெரினாவில் கலைஞருக்கு பிரமாண்ட நினைவிடம் கட்டும் பணிகளில் திமுக அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில் பாஜகவைச் சேர்ந்த

எச். ராஜா இதனை விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் அந்த வீடியோவில் பேசியதாவது, கருணாநிதி காலமாகி 3 வருடம் ஆகிவிட்டது. இந்த நினைவிடத்தை திமுக அதன் அறக்கட்டளை பணத்தில் இருந்து கட்ட வேண்டும். எதற்கு மக்களின் வரி பணத்தில் கட்ட வேண்டும்?

திமுகவுக்கு இதே வேலையா போச்சு. செத்து போனவர்களுக்கு தெவசத்தை கோவில் பணத்தில் இருந்து செய்வது, அண்ணாவின் நினைவு நாளைக்கு இந்து கோவிலில் சமபந்தி போஜனை நடத்துகின்றனர். ஏன் சர்ச்சியிலோ அல்லது மசூதியிலோ பண்ண வேண்டியதுதானே? இந்துக்கள் என்றால் இளிச்ச வாய் என்று நினைக்கின்றனர்.

அதுபோல கருணாநிதிக்கு எதுக்கு மக்கள் வரிப்பணத்தில் நினைவிடம் அமைக்க வேண்டும்? திமுகவின் குடும்பமே கார்பரேட்டாக இருக்கிறது. அப்படி இருக்க கருணாநிதியின் நினைவிடத்துக்கு அவர்களது பணத்தில் செலவு செய்ய வேண்டியதுதானே? என்று எச். ராஜா அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad