நடிகர் மம்மூட்டி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, August 26, 2021

நடிகர் மம்மூட்டி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

நடிகர் மம்மூட்டி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

மலையாள நடிகர் மம்மூட்டிக்கு மற்றும் அவரது குடும்பத்துக்கு சொந்தமாக செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழிபள்ளம் கிராமத்தில் 40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தைக் கழுவேலி புறம்போக்கு எனும் காப்புக்காடு நிலமாக மறுவகைப்படுத்தி, கடந்த மார்ச் மாதம் நில நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவ ை எதிர்த்து நடிகர் மம்மூட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில், கடந்த 2007ஆம் ஆண்டு தனியார் நிலம் என வகைப்படுத்தப்பட்ட நிலத்தைக் கழுவேலி புறம்போக்காக மறுவகைப்படுத்தப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த நிலம் தொடர்பாகக் கடும் நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 27ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்தது.

No comments:

Post a Comment

Post Top Ad