செப்டம்பர் 08: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ், பலி நிலவரம்..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 8, 2021

செப்டம்பர் 08: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ், பலி நிலவரம்..!

செப்டம்பர் 08: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ், பலி நிலவரம்..!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் ஆயிரத்து 587 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துற ை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் இன்று 1 லட்சத்து 60 ஆயிரத்து 303 மாதிரிகள் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், ஆயிரத்து 587 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 27 ஆயிரத்து 365 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 4 கோடியே 35 லட்சத்து 88 ஆயிரத்து 378 மாதிரிகள் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களில் 889 பேர் ஆண்கள், 698 பேர் பெண்கள். இதன் மூலம், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 33 ஆயிரத்து 964 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 93 ஆயிரத்து 363 ஆகவும் அதிகரித்து உள்ளது.



ஆயிரத்து 594 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 76 ஆயிரத்து 112 ஆக உயர்ந்துள்ளது. 18 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 3 பேர் தனியார் மருத்துவமனையிலும், 15 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 73 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னையை பொறுத்தவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகை சற்று குறைந்துள்ளது. சென்னையில் நேற்று கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 194 ஆக இருந்த நிலையில் இன்று 179 ஆக குறைந்துள்ளது.
இவ்வாறு மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad