இந்த அட்டை தாரர்களுக்கு மாதம் ரூ.1000 கிடைக்காதா? அதிருப்தியில் பயனாளிகள்... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 19, 2021

இந்த அட்டை தாரர்களுக்கு மாதம் ரூ.1000 கிடைக்காதா? அதிருப்தியில் பயனாளிகள்...

இந்த அட்டை தாரர்களுக்கு மாதம் ரூ.1000 கிடைக்காதா? அதிருப்தியில் பயனாளிகள்...

பொதுவிநியோக திட்டத்தின் கீழ் 5 வகையான குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 13 லட்சத்து 80 ஆயிரத்து 112 குடும்ப அட்டைகள் இருக்கின்றன. அவற்றில் PHH - NPHH என மொத்தம் 1 கோடியே 86 லட்சத்து 8 ஆயிரத்து 59 குடும்ப அட்டைகளும், வறுமையிலும் வறுமை (AAY) 18 லட்சத்து 63 ஆயிரத்துக்கு 77 குடும்ப அட்டைகளும், அன்னபூர்ணா (pds) 8491 குடும்ப அட்டைகளும், முதியோர் (oap) குடும்ப அட்டைகள் 4 லட்சத்து 1045 குடும்ப அட்டைகள் மற்றும் காவலர் குடும்ப அட்டைகள் (nphh) 59271 குடும்பை அட்டைகளும் உள்ளன. மேற்கண்ட வகைகளில் அரசின் கூடுதல் சலுகைகளும் மாறுபட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதில் வறுமையிலும் வறுமை (AAY) அட்டை தாரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
AAY ரேஷன் கார்டு குறிப்பாக நிலையான வருமானம் இல்லாத நபர்களுக்கு வழங்கப்படுகிறது. வேலையில்லாதவர்கள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் இந்த பிரிவின் கீழ் வருகிறார்கள். இந்த அட்டைதாரர்கள் ஒரு குடும்பத்திற்கு மாதம் 35 கிலோ உணவு தானியங்களைப் பெற தகுதியுடையவர்கள். அவர்கள் அரிசிக்கு ரூ .3, கோதுமைக்கு ரூ .2 என்றமானிய விலையில் உணவு தானியங்களைப் பெறுகிறார்கள்.

இந்நிலையில், தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று கூறியிருந்தது. இந்த தொகையை பெரும் நோக்கில் புதிதாக திருமணமானவர்கள் பலரும் பழைய ரேஷன் அட்டையில் இருந்து பெயரை நீக்கிவிட்டு புதிதாக ரேஷன் கார்டுக்கு அப்ளை செய்து வருகின்றனர். ஏற்கனவே தனி நபர் ரேஷன் கார்டுக்கு பொருட்கள் கிடைப்பதில்லை என்று புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன.



இதுகுறித்து ரேஷன் கடையில் கேட்டால், அதிகாரிகளிடம் இருந்து உரிய அறிவிப்பு வரவில்லை என்று கூறுகின்றனர். மேலும், பட்ஜெட் கூட்டத் தொடரின் போது ரூ.1000 உரிமை தொகை வழங்குவதற்கு தகுதி வாய்ந்த ரேஷன் கார்டுகள் கண்டறியப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தார். இதனால் உரிமைத்தொகை பெறுபவர்களின் எண்ணிக்கையை குறைக்க அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், தனிநபர் ரேஷன் அட்டை தாரர்கள் அதிருப்தியில் உள்ளனர். ஆனால், அரசு இதுதொடர்பாக எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. மேலும், ரேஷன் கடையில் அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் தருவோம் என்ற திட்டத்தை குறித்து விசாரித்தபோது கொண்டைகடலை கொடுத்த கார்டுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் கொண்டைகடலை போடாத கார்டுக்கு இல்லை என்று கூறியதாக அண்மையில் செய்திகள் வந்தன.

அதுமட்டுமில்லாமல் (NPHH) அட்டை தாரர்களுக்கு உரிமைத்தொகை இல்லையென்று என்றும் வதந்திகள் வந்தன. இந்நிலையில், ரேஷன் கார்டில் மோசடிகள் ஏற்படுவதை தடுக்க யார் யாருக்கு உரிமைத்தொகை கிடைக்கும் என்ற அறிவிப்பை அரசு முன்கூட்டி அறிவிக்க வாய்ப்பில்லை என்றும் அதிகாரி ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad