திருமண உதவி தொகை ரூ.10 ஆயிரம்: தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு
தமிழக சட்டசபையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அதில், போலி பட்டியல் தயாரிக்கும் நபர்களின் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பி. மூர்த்தி அறிவித்தார்.
''போலி பட்டியல் தயாரிக்கும் நபர்கள், போலி பட்டியல்களை பயன்படுத்தி உள்ளீட்டு வரி வரவைப் பெற்று அரசுக்கு வருவாய் இழப்பு செய்வோர் மற்றும் வேண்டுமென்றே தவறான ஆவணங்களை தாக்கல் செய்து வரி திருப்பு தொகை பெறுவோர் மீது கடுமையான குற்றவியல்
நடவடிக்கை எடுப்பதற்காக 'தமிழ்நாடு கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், போதை பொருள் குற்றவாளிகள், குண்டர்கள், பாலியல் தொழில் குற்றவாளிகள், திருட்டு குடிசை பகுதி நிலங்களை பரிப்போர், மணல் திருட்டு குற்றவாளிகள், அபாயகர செயல்கள் தடுப்பு சட்டம் 1982 இல் வரி ஏய்ப்பு செய்வோரையும் சேர்க்கும் வகையில் உரிய சட்ட திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
வரி ஏய்ப்பு குற்ற தடுப்பு நடவடிக்கைகளை காவல் துறையின் பொருளாதார குற்ற தடுப்பு பிரிவின் மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
''போலி பட்டியல் தயாரிக்கும் நபர்கள், போலி பட்டியலை பயன்படுத்தி உள்ளீட்டு வரி வரவை பெற்று அரசுக்கு வருவாய் இழப்பு செய்வோர் மற்றும்
தவறான ஆவணங்களை தயார் செய்து வரி திருப்பு தொகை பெறுவோர் மீது வணிகவரி துறையால் கடுமையான குற்றவியல் நடவடிக்கை தொடர வேண்டியுள்ளது. இதனை விரைவு படுத்துவதற்காக, வரி ஏய்ப்பு குற்ற தடுப்பு நடவடிக்கைகளை காவல் துறையின் பொருளாதார குற்ற தடுப்பு பிரிவின் மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
No comments:
Post a Comment