அமலுக்கு வந்த 144 தடை; மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, September 7, 2021

அமலுக்கு வந்த 144 தடை; மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு!

அமலுக்குஅமலுக்கு வந்த 144 தடை; மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு!

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு, அதன் எல்லைப் பகுதிகளில் பல்வேறு மாநில

விவசாயிகள் சுமார் 10 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பலத்த மழை, கடும் பனி மற்றும் வெயில் என எதையும் பொருட்படுத்தாமல் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி போராடிக் கொண்டிருக்கின்றனர். வேளாண் சட்டங்களால் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை முறையானது கைவிடப்படும் சூழல் ஏற்படும்.

இணங்க மறுக்கும் மத்திய அரசு

விவசாயம் முழுவதும் கார்ப்பரேட்கள் வசமாகிவிடும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மத்திய அரசுடன் 10 சுற்றுகள் பேச்சுவார்த்தை நடந்தும் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை. விவசாயிகளும் தங்களது போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் கடந்த மாதம் 28ஆம் தேதி

ஹரியானா மாநிலம் கர்னாலில் உள்ள சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad