தலிபான்கள் துப்பாக்கிச் சூடு: பொது மக்கள் 17 பேர் பலி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 4, 2021

தலிபான்கள் துப்பாக்கிச் சூடு: பொது மக்கள் 17 பேர் பலி!

தலிபான்கள் துப்பாக்கிச் சூடு: பொது மக்கள் 17 பேர் பலி!

 ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ள நிலையில், தலைநகர் காபூலில் தலிபான் போராளிகள் ஆயுதங்களை ஏந்தி வானில் துப்பாக்கிச் சூடு நடத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, ஆட்சி அதிகாரத்தை தலிபான் அமைப்பினர் கைப்பற்றி உள்ளனர். இதனால் தலிபான் போராளிகள் மகிழ்ச்சியின் உச்சியில் திளைத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆட்சி அமைக்கும் பணியில் தலிபான் அமைப்பினர் படு தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக தலிபான் அமைப்பின் மூத்த அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

தலிபான் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் முல்லா அப்துல் கனி பரதர் தலைமையில் ஆட்சி அமைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad