செப்டம்பர் 24: தமிழ்நாட்டில் உயரும் கொரோனா பாதிப்பு..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 24, 2021

செப்டம்பர் 24: தமிழ்நாட்டில் உயரும் கொரோனா பாதிப்பு..!

செப்டம்பர் 24: தமிழ்நாட்டில் உயரும் கொரோனா பாதிப்பு..!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,733 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,53,848 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் தற்போது 17,196 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 205 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 548725 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 538138 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 8460 பேர் உயிரிழந்துள்ளனர்.


கோவையில் இன்று 210 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 241355 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 236911 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2325
பேர் பலியாகியுள்ளனர்.

செங்கல்பட்டில் இன்று 122 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,68,078 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,64,434 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2,466
பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,57,531 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 4,51,69,095 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இன்று 1,631 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 26,01,198 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 35,454 ஆக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad