ஓய்வூதியம் 25 ஆயிரம் ரூபாயாக உயர்வு: இவங்களுக்கும் அடித்த ஜாக்பாட்..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 9, 2021

ஓய்வூதியம் 25 ஆயிரம் ரூபாயாக உயர்வு: இவங்களுக்கும் அடித்த ஜாக்பாட்..!

ஓய்வூதியம் 25 ஆயிரம் ரூபாயாக உயர்வு: இவங்களுக்கும் அடித்த ஜாக்பாட்..!

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படக்கூடிய ஓய்வூதியம் குறித்து தமிழக சட்டசபையில் இன்று பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார். அப்போது அவர்,
உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசுகிறபோது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படக்கூடிய ஓய்வூதியத்தை உயர்த்தித் தரவேண்டுமென்று சொன்னார்.

ஏற்கெனவே 20 ஆயிரம் ரூபாயிலிருந்து, 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால், உயர்த்தப்பட்டது. வெறும் அறிவிப்போடு நின்று விட்டது. அந்த அறிவிப்புதான் இன்றுவரையில் இருந்து கொண்டிருக்கிறது. அதற்கு முறைப்படி சட்டமன்றத்திலே சட்டமுன்வடிவு கொண்டு வந்து நிறைவேற்றியிருக்க வேண்டும்.

ஆனால், அதை நிறைவேற்றவில்லை. கடந்த ஆட்சி அதைச் செய்யவில்லை. ஆனால், தி.மு.க. ஆட்சி அமைந்ததற்குப்பிறகு, - இன்னும் ஒரு நாள்தான் சட்டமன்றம் நடைபெறவிருக்கிறது. திங்கட்கிழமையுடன் அவைக் கூட்டம் முடியவிருக்கிறது.

திங்கட்கிழமை அன்று, 25 ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கிடும் வகையில், சட்டமுன்வடிவினை இந்த அவையிலே கொண்டுவந்து, நிறைவேற்றித் தரப் போகிறோம் என்ற செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறேன்'' என இவ்வாறு முதல்வர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad