தமிழ்நாட்டில் 32 சுங்கச் சாவடிகளை நீக்க நடவடிக்கை: உறுதியளித்த அமைச்சர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 2, 2021

தமிழ்நாட்டில் 32 சுங்கச் சாவடிகளை நீக்க நடவடிக்கை: உறுதியளித்த அமைச்சர்!

தமிழ்நாட்டில் 32 சுங்கச் சாவடிகளை நீக்க நடவடிக்கை: உறுதியளித்த அமைச்சர்!

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் சிறு குறு நடுத்தர தொழில் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்று வருகிறது.
முன்னதாக சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா தமிழகத்தில் சுங்கச் சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தபட்டது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் சங்கச் சாவடியை நகாய் நிறுவனம் ஏற்படுத்தி தன்னுடைய வசூல் காலம் முடிந்த பின்பும் தொடர்ந்து அதிக கட்டணம் வசூலில் ஈடுபட்டு வருகிறது. அதை தகவல் அறியும் உரிமைச் சட்டமூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் 536 கோடி செலவு செய்ததில் 2018ஆம் ஆண்டின்படி அதனுடைய வருமானம் 1098கோடி வரை லாபம் எட்டியுள்ளது.

ஆனாலும் தற்போது வரை தொடர்ந்து சுங்ககட்டணத்தை உயர்த்தி வசூல் செய்து கொண்டுள்ளது. இது தமிழக மக்கள் மீதும், தமிழகத்தின் மீதும் பொருளாதார தாக்குதலை நடத்தி வருகிறது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.
அதற்கு பதிலளித்து பேசிய பொதுப்பணிதுறை அமைச்சர் எ.வ.வேலு, “மாநகர, நகரத்திலிருந்து சுமார் 10கி.மீ தொலைவில் தான் சுங்கச் சாவடி அமைக்க வேண்டும். ஆனால் சென்னையை சுற்றி 5 சுங்கச்சாவடிகள் வசூல் செய்து வருகிறது. அதை நிறுத்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதை ரத்து செய்ய நேரில் சென்று ஒன்றிய அரசை வலியுறுத்துவோம்.

மேலும் தமிழ்நாட்டில் 16 சுங்க சாவடிகள் தான் இருக்க வேண்டும், ஆனால் 48 சுங்க சாவடிகள் உள்ளன. ஆகையால் அந்த 32 சுங்கசாவடிகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து சட்டப்பேரவை கூட்டுத்தொடர் முடிந்தவுடன் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து வலியுறுத்தப்படும்” என்று பதிலளித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad