நேருக்கு நேர் மோதிய படகுகள்: 33 பேர் மாயம், 1 பெண் பலி, பதைபதைக்கும் நொடிகள் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 9, 2021

நேருக்கு நேர் மோதிய படகுகள்: 33 பேர் மாயம், 1 பெண் பலி, பதைபதைக்கும் நொடிகள்

நேருக்கு நேர் மோதிய படகுகள்: 33 பேர் மாயம், 1 பெண் பலி, பதைபதைக்கும் நொடிகள்

அசாம் மாநிலம் பிரம்மபுத்திரா ஆற்றில் எதிரெதிரே வந்து கொண்டிருந்த இரண்டு படகுகள் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரு பெண் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் 33 பேர் காணாமல் போயுள்ளனர். மொத்தம் 120 பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகளின் விபத்து கவுகாத்தியிலிருந்து 350 கிமீ தொலைவில் உள்ள ஜோர்ஹாட்டில் உள்ள நிமதி காட் அருகே நடந்ததாக கூறப்படுகிறது.
விபத்துக்குள்ளான படங்களில் படகுகளில் ஒன்று அரசு படகாகும். அந்த படகு மஜூலி நதி தீவில் இருந்து நிமதி ஆற்றங்கரையை நோக்கியும் மற்ற படகு மஜூலியை நோக்கியும் சென்று கொண்டிருந்தது.

இந்த விபத்தை நேரில் கண்ட சாட்சியான ஒருவர் அஸ்ஸாமிய செய்தி சேனலான 'பிரதிதின் டைம்ஸிடம்' கூறியதாவது, “நிமதி கட்டிலிருந்து மஜூலி நோக்கி செல்லும் படகு மஜூலியின் கமலாபரி காட்டில் இருந்து வந்த மற்ற படகில் மோதியது. படகுகளில் நிறைய பெண்கள் மற்றும் குழந்தைகள் இருந்தனர். பொதுவாக மழைக்காலங்களில் அந்த இடத்தில் பாதுகாப்பு பணியாளர்கள் இருக்க வேண்டும் ஆனால், துரதிர்ஷ்டவசமாக விபத்தின்போது யாரும் இல்லை என்றும் ஓரிரு மணி நேரம் கழித்துதான் சில போலீசார் அந்த இடத்திற்கு வந்தனர் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, ஜோர்ஹட் துணை ஆணையர் அசோக் பர்மன் அளித்த பேட்டியில், விபத்து நடந்த இடத்தில இருந்து இதுவரை 42 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஆற்றில் இருந்து எந்த உடலும் கண்டெடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், படகுகள் மூழ்கிய பிறகு, ஒரு படகு 1.5 கிமீ தொலைவில் அடித்துச் சென்று ஆற்றின் படுக்கையில் சிக்கியுள்ளது. அந்த படகு படகு இப்போது தலைகீழாக உள்ளது, அதை எங்களால் திருப்ப முடியவில்லை. படகை திருப்பியவுடன், யாராவது அங்கே சிக்கிக்கொண்டார்களா என்று பார்க்க முடியும்'' என்று அவர் கூறினார்.

படகு விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளமான ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், அசாம் மாநிலத்தில் படகு விபத்து குறித்த செய்தி கவலை அளிக்கிறது. மாயமான பயணிகளை மீட்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளார்.



முன்னதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தமது ட்வீட்டில், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையின் உதவியுடன் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad