வேலையில்லாதவர்களுக்கு மாதம் ரூ.5,000: முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 19, 2021

வேலையில்லாதவர்களுக்கு மாதம் ரூ.5,000: முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதி!

வேலையில்லாதவர்களுக்கு மாதம் ரூ.5,000: முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதி!

உத்தரகண்ட் மாநிலத்தில், ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால், வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.

உத்தரகண்ட் மாநிலத்தில், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ.க., ஆட்சி நடைபெறுகிறது. எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அங்கு சட்டப்பேரவைத் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.

டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சியும் உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்க உள்ளது. கடந்த ஜூலை மாதம் உத்தரகண்ட் மாநிலத்திற்கு வந்த டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என வாக்குறுதி தந்தார்

இந்நிலையில் இன்று, உத்தரகண்ட் மாநிலம் நைனிடாலில் செய்தியாளர்களிடம் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:
மாநில வேலைவாய்ப்பில் 80 சதவீதம் உத்தரகண்ட் மாநிலத்தில் வசிப்பவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படும். வேலைவாய்ப்புகளை தேட இணையதளம் தொடங்கப்படும். டெல்லியில் இது போன்ற இணைய போர்ட்டல் மூலம் 10 லட்சம் பேர் வேலைப் பெற்றனர்.

மேலும், வேலைவாய்ப்பு மற்றும் புலம்பெயர் தொழிலாளர் விவகாரங்கள் துறை அமைச்சகம் உருவாக்கப்படும். பா.ஜ.க.,வுக்கு வாக்களித்தால், ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய முதல்வரைத் தான் பெற முடியும். டெல்லியில் இலவச மின்சாரம் வழங்கி சாதித்து காட்டினோம். அரசுக்கு ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற உறுதி இருந்தால் செய்ய முடியும். பா.ஜ.க., - காங்கிரஸ் கட்சிகளிலும் நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள்.

அத்தகைய நல்ல மனிதர்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வரவேற்கப்படுகின்றனர். அனைத்து குடும்பத்தினருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படும். ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களுக்குள் 1 லட்சம் அரசு வேலைகளை ஆம் ஆத்மி வழங்கும். வேலையில்லாதவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad