தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: உங்களது ஊரின் நிலவரம் என்ன? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, September 7, 2021

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: உங்களது ஊரின் நிலவரம் என்ன?

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: உங்களது ஊரின் நிலவரம் என்ன?

தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்):
சோழிங்கநல்லூர் (சென்னை), அம்பத்தூர் (திருவள்ளூர் ) தலா 4, அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), நுங்கம்பாக்கம் (சென்னை), DGP அலுவலகம் (சென்னை), திருவாலங்காடு (திருவள்ளூர்), சின்னக்கல்லார் (கோவை), பெரம்பூர் (சென்னை), வால்பாறை (கோவை) , திருவள்ளூர் , அயனாவரம் (சென்னை), ஆலந்தூர் (சென்னை) தலா 3, செஞ்சி (விழுப்புரம்), பூவிருந்தவல்லி (திருவள்ளூர்), திருத்தணி (திருவள்ளூர்), நடுவட்டம் (நீலகிரி), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), சத்தியபாமா பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு), அரக்கோணம் (ராணிப்பேட்டை), சோலையார் (கோவை), பூண்டி (திருவள்ளூர்) , தேவலா (நீலகிரி), சின்கோனா (கோவை), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), பந்தலூர் ( நீலகிரி) தலா 2.



மீனவர்களுக்கான எச்சரிக்கை:

07.09.2021: மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad