கும்பகோணத்தில் எடப்பாடி குடும்பத்தினர் பூஜை: மறுப்பு தெரிவித்த கோவில் நிர்வாகம்!
கும்பகோணம் அய்யாவாடி கோவிலில் நேற்று (செப்டம்பர் 6) அமாவாசை நாளில் பூஜை செய்ய மாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடும்பம் அனுமதி கேட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவலை காரணம் காட்டி கோவில் நிர்வாகம் திடீரென மறுப்பு தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியதிலிருந்தே எடப்பாடி பழனிசாமி கலக்கத்தில்
உள்ளதாக கூறப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தாலும் பிரதான எதிர்கட்சியாக எதிர் வரிசையில் அமர்ந்தது. அதிமுகவில் எழுந்த குழப்பத்துக்கு நடுவே முதல்வர் வேட்பாளராக தன்னை நிறுத்தச் செய்தார் எடப்பாடி பழனிசாமி. தேர்தலுக்குப் பின்னர் எதிர்கட்சித் தலைவர் பதவியையும் பன்னீர் செல்வத்துக்கு விட்டுக் கொடுக்காமல் தனது செல்வாக்கை நிரூபித்தார்.
ஆனால் சமீபகாலமாக எடப்பாடி பழனிசாமியின் முகத்தில் அவ்வளவு பிரகாசம் இல்லை. சசிகலாவின் ஆடியோ, நேர்காணல் வெளியான பின்னரே
எடப்பாடி தனது வேகத்தை குறைத்துக் கொண்டார். இதற்கிடையே கொடநாடு விவகாரம் மீண்டும் அனலைக் கிளப்ப தன்னை சிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக பதற்றம் கொள்வதாக கூறுகிறார்கள்.
No comments:
Post a Comment