முதல்வரின் அதிகாரம் சரியாக பயன்படுத்தப்படுகிறது: இயக்குநர் வசந்த பாலன் நெகிழ்ச்சி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, September 7, 2021

முதல்வரின் அதிகாரம் சரியாக பயன்படுத்தப்படுகிறது: இயக்குநர் வசந்த பாலன் நெகிழ்ச்சி!

முதல்வரின் அதிகாரம் சரியாக பயன்படுத்தப்படுகிறது: இயக்குநர் வசந்த பாலன் நெகிழ்ச்சி!

இயக்குநர்

வசந்தபாலன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம் அங்காடித் தெரு. சென்னை தி.நகர் வீதிகளில் நாம் நடந்து செல்லும் போதும், அக்கடைகளுக்கும் நாம் ஷாப்பிங் செல்லும் போதும் குளுகுளு ஏசி காற்றை அனுபவித்திருப்போம். ஆனால், அந்த கடைகளில் வேலை பார்க்கும் பணியாளர்களின் துயரத்தை ஒரு போதும் நாம் அனுபவித்திருக்க முடியாது.

அந்த கடைகளில் வேலை செய்யும் பணியாளர்களின் கஷ்டத்தை நம்மையும் உணரச் செய்ய வைத்த படம் அங்காடித் தெரு. கிராமத்தில் வாழும் இளைஞர்கள் அவர்களது குடும்ப சூழல் காரணமாக அடுக்குமாடி கடை ஒன்றில் பணிபுரிய வருகிறார்கள். நகரத்தின் நடுவே இருக்கும் கடையில் அவர்கள் அடிமை போன்று நடத்தப்படுவதையும், நிறுவனங்களின் மனிதாபிமானமற்ற போக்கையும் தத்ரூபமாக படம் பிடித்து அந்த தொழிலாளார்களுக்கும் சொல்வதற்கு கதை உண்டு என, குறிப்பாக நாள்தோறும் பணி நேரம் 12 மணி நேரத்துக்கு மேல் என்பது ஒரு கொடுமை என்றால், பணி நேரத்தில் அவர்களை உட்காரக் கூட விடாமல் நின்று கொண்டே பணி பார்க்க செய்யும் கொடூரத்தையும், அதனால் அவர்கள் படும் இன்னல்களையும் காட்சிப் படுத்தியிருப்பார் வசந்த பாலன்.



இந்த நிலையில், தமிழகம் முழுவதும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் வேலை செய்யும் பணியாளர்கள் அமர்ந்து கொண்டே பணியாற்றும் வகையில் சட்டதிருத்தம் மேற்கொள்ள முடிவு செய்துள்ள தமிழக அரசு அதற்கான சட்ட முன்வடிவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் நபர்கள் அவர்களது வேலை நேரம் முழுக்க நிற்க வைக்கப்படுவதால், பல வகையான உடல்நலக் கேடுகளுக்கு ஆளாகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த சட்ட முன்வடிவை கொண்டு வந்துள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அங்காடித் தெரு படத்தில் இதனை சுட்டிக்காட்டியுள்ள இயக்குநர் வசந்தபாலன், ஜெனிவா தமிழ் இருக்கையை விட நமது பணியாளர்களுக்கு

இருக்கை வாங்குவது பெரிய விஷயம் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் இணையதளத்துக்கு பேட்டியளித்துள்ள அவர், முதல்வர் ஸ்டாலின் நிர்வாகத் திறனுடன் செயல்படுகிறார். முதல் நாளில் அவரது பதவியேற்பே 15ஆவது ஆண்டில் பதவியேற்பது போன்ற அனுபவ ஞானத்துடன் பதவியேற்றார். ஒரு அரசு மேக்ரோ திட்டங்களான பாலம் கட்டுவது, பல்கலைக்கழகங்கள் கட்டுவது, சாலை போடுவது போன்ற திட்டங்களை செயல்படுத்தும். ஆனால், மைக்ரோ திட்டங்கள் எனப்படும் பள்ளி இடைநிற்றல் மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க ரூ.200 கோடியை இந்த அரசு ஒதுக்கியுள்ளது. பணியாளர்களுக்கு ஸ்டூல் கொடுப்பது சாதாரண விஷயம்தான் அதனை உன்னிப்பாக கவனித்து அளித்துள்ளனர். தாயுள்ளத்துடன் நிர்வாகம் செய்கிறார் ஸ்டாலின். முதல்வர் நாற்காலி இவ்வளவு பேருக்கு நல்லது செய்யும் அளவிற்கு மாறியுள்ளது” என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad