விநாயகர் சதுர்த்திக்கு தடை ஏன்: முதல்வர் ஸ்டாலின் விளக்கம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, September 7, 2021

விநாயகர் சதுர்த்திக்கு தடை ஏன்: முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

விநாயகர் சதுர்த்திக்கு தடை ஏன்: முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

தமிழ்நாட்டில் வருகிற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி வரை கொண்டாடப்படவுள்ள சமய விழாக்களின் கொண்டாட்டங்களிற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை
தமிழக அரசு விதித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும், நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கும் அனுமதி கிடையாது.

ஆனால், விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக தனி நபர்கள் தங்களது இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாகச் சென்று அருகிலுள்ள நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இக்கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த அறிவிப்புக்கு இந்து அமைப்புகள், பாஜகவினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தடையை மீறி விநாயகர் சிலைகளை வைப்போம் என்றும் கூறி வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாட அரசு அனுமதி வழங்க வலியுறுத்தி, வரும் 10, 11, 12 ஆகிய தேதிகளில் மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் பாஜகவினர், தலைவர்கள் வீடுகளின் வாசல்களில் விநாயகர் சிலைகளை வைத்து, பூஜை செய்து வழிபாடு செய்ய உள்ளதாக

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.ஆனால், மத்திய அரசின் வழிகாட்டல் படியே தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த தகவலை நீதிமன்றத்திலும் அரசு தெரிவித்துள்ளது. கடவுளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad