உள்ளாட்சி தேர்தல்: செப்டம்பர் 6ம் தேதி அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணைய கூட்டம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 4, 2021

உள்ளாட்சி தேர்தல்: செப்டம்பர் 6ம் தேதி அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணைய கூட்டம்

உள்ளாட்சி தேர்தல்: செப்டம்பர் 6ம் தேதி அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணைய கூட்டம்

தமிழகத்தில் நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை 9 மாவட்டங்களில் மட்டும் மாவட்ட மறுசீரமைப்பு காரணமாக உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை. இதுதொடர்பான வழக்கு விசாணையின்போது மேற்கண்ட மாவட்டங்களுக்கு செப்டம்பர் 15ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, மேற்கண்ட மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் பணிகளை முடங்கியுள்ளது. அந்த வகையில் அண்மையில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் வாக்கு பதிவு நாளன்று காலை 7 முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்தது.

அதனை தொடர்ந்து, 9 மாவட்டங்களையும் சேர்த்து 2019 இல் தேர்தல் நடத்தப்பட்ட 28 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த ஜூன் 30 வரை ஏற்பட்டுள்ள காலி பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் என்றும் அந்நாளில் கொரோனா தொற்று உள்ள வாக்காளர்கள் மாலை 6 மணி முதல் 7 மணி வர ை வாக்களிக்க அனுமதிக்கப்புவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கான கூட்டம் 6ம் தேதி பிற்பகல் 12மணிக்கு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்த கூட்டம் சென்னை அரும்பாக்கம் ஜவஹர்லால் நேரு சாலையில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad