9 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் செப்டம்பர் 6ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று (செப்டம்பர் 2) நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம்,
திருவண்ணாமலை, திருப்பத்தூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
செப்டம்பர் 3ஆம் தேதி நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
செப்டம்பர் 4ஆம் தேதி நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி 13, கலசப்பாக்கம் (திருவண்ணாமலை) 12, புதுக்கோட்டை, அதிராமபட்டினம்
(தஞ்சாவூர்) தலா 8, செய்யார் (திருவண்ணாமலை) 7, வட்டணம் (ராமநாதபுரம்), தாமரைப்பக்கம் (திருவள்ளூர்) தலா 6, செங்கம் (திருவண்ணாமலை) 5, அவலூர்பேட்டை (விழுப்புரம்) 4, பொண்ணை அணை (வேலூர்), திருப்பத்தூர், கோவிலான்குளம் (விருதுநகர்), காரைக்குடி (சிவகங்கை), ஓமலூர் (சேலம்) தலா 3, கலவை (ராணிப்பேட்டை), ஊத்துக்குளி (திருப்பூர்), உசிலம்பட்டி (மதுரை), கொரட்டூர் (திருவள்ளூர்) தலா 2, பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), ஹரூர் (தர்மபுரி), எமரால்டு (நீலகிரி), திருச்சிராப்பள்ளி விமான நிலையம் தலா 1 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
No comments:
Post a Comment