ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு; தெற்கு ரயில்வே சூப்பர் ஏற்பாடு!
இந்தியாவில் ரயில் டிக்கெட் முன்பதிவிற்கான சேவையை இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி வழங்கி வருகிறது. இதற்காக பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டு அதன் வாயிலாக பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஐ.ஆர்.சி.டி.சி-யின் முன்பதிவு டிக்கெட் மற்றும் முன்பதிவில்லாத டிக்கெட் விவரங்கள் டெல்லி,
மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நான்கு கட்டுப்பாட்டு மையங்களில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
இந்திய ரயில்வே மண்டலங்கள்
இந்திய ரயில்வே ஆனது வடக்கு ரயில்வே, வடகிழக்கு ரயில்வே, வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே, கிழக்கு ரயில்வே, தென்கிழக்கு ரயில்வே, தென்மத்திய ரயில்வே, தெற்கு ரயில்வே, மத்திய ரயில்வே, மேற்கு ரயில்வே, தென்மேற்கு ரயில்வே, வடமேற்கு ரயில்வே, மேற்குமத்திய ரயில்வே, வடமத்திய ரயில்வே, தென்கிழக்கு மத்திய ரயில்வே, கிழக்கு கடற்கரை ரயில்வே, கிழக்கு மத்திய ரயில்வே என 16 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
தினசரி டிக்கெட் விற்பனை
அதில் தெற்கு ரயில்வே, தென்மத்திய ரயில்வே,
தென்மேற்கு ரயில்வே ஆகிய மண்டலங்களுக்கான டிக்கெட் கட்டுப்பாட்டு மையம் சென்னை மூர் மார்க்கெட் கட்டிடத்தின் 7வது மாடியில் செயல்பட்டு வந்தது. இது கடந்த 1985ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தற்போது தெற்கு ரயில்வேயில் உள்ள இந்தியன் ரயில்வே உணவு, சுற்றுலா கழகமான ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம், ரயில் நிலைய கவுன்ட்டர் மற்றும் முன்பதிவு மையங்களில் என தினசரி 9 லட்சத்திற்கும் மேல் டிக்கெட் விற்பனை நடந்து வருகிறது.
No comments:
Post a Comment