சசிகலா வீட்டு வேலைக்கு வந்தவர், தலைவியில் சில காட்சிகள் திரிக்கப்பட்டுள்ளன - ஜெயக்குமார் பரபரப்பு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 10, 2021

சசிகலா வீட்டு வேலைக்கு வந்தவர், தலைவியில் சில காட்சிகள் திரிக்கப்பட்டுள்ளன - ஜெயக்குமார் பரபரப்பு

சசிகலா வீட்டு வேலைக்கு வந்தவர், தலைவியில் சில காட்சிகள் திரிக்கப்பட்டுள்ளன - ஜெயக்குமார் பரபரப்பு

ஏ.எல். விஜய் இயக்கியுள்ள 'தலைவி' ஜெயலலிதாவின் சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத் , எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்த்சாமி , கருணாநிதி கேரக்டரில் நாசரும், ஆர்எம் வீரப்பன் கேரக்டரில் சமுத்திரகனியும் நடித்துள்ளனர்.
தலைவி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு என்றாலும் படத்தின் துவக்கத்திலேயே இது கற்பனை படைப்பு என்று தெரிவிக்கிறார்கள்.
நிஜ வாழ்க்கை நபர்களின் பெயர்களை லேசாக மாற்றியிருக்கிறார்கள். ஜெயலலிதாவை ஜெயா என்றும், எம்.ஜி.ஆரை எம்.ஜே.ஆர். என்றும் காட்டியுள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் சினிமா பிரியர்கள் பலரும் இந்த படத்தை தற்போது பார்த்து வருகின்றனர்.

அண்மையில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்துக்கே அதிமுகவில் இருந்து பல்வேறு எதிர்மறை விமர்சனங்களும், கண்டனங்களும் எழுந்த நிலையில் அதிமுகவின் தலைவர்களை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்துக்கு எப்படியான கருத்துக்கள் வருமோ என்ற பரபரப்பு ஆரம்பம் முதலே இருந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று தலைவி படத்தை பார்த்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் '' தலைவி படத்தை பொறுத்தவரை நன்றாக எடுத்துள்ளனர் என்றும் சில காட்சிகளை மட்டும் நீக்க வேண்டும்'' என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியவர், ''தலைவி படத்தில் ஜெயலலிதாவின் துணிவு, அறிவு, விவேகம் போன்ற பன்முகத்தன்மை காட்டப்பட்டுள்ளது. இந்த படத்தில் அதிமுக கட்சிக்கு திமுக கொடுத்த தொல்லைகள் அராஜகங்கள் காட்டப்படவில்லை. வரலாறு சொல்லும் போது அதையும் சொல்ல வேண்டும்.

மேலும், எம்.ஜி.ஆர் அமைச்சர் பதவி கேட்பது போல் உள்ள காட்சியை நீக்க வேண்டும். தலைவியில் சில காட்சிகள் திரிக்கப்பட்டுள்ளன. தலைவர் எம்ஜிஆரை மதிக்காமல் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா செயல்பட்டார் என்பது போன்ற சித்தரிப்பை ஏற்க முடியாது. அக்காட்சிகளை நீக்க வேண்டும் என்றும்
சசிகலாவுக்கும், அரசியலுக்கும் சம்மந்தமில்லை. அவர் வீட்டு வேலைகளை கவனிக்க வந்தவர். படத்தில் அந்த காட்சிகள் சரியாக வந்துள்ளது'' என்று ஜெயக்குமார் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad