"இதை உடனே பண்ணுங்க!" - முதலமைச்சருக்கு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி திடீர் கடிதம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 3, 2021

"இதை உடனே பண்ணுங்க!" - முதலமைச்சருக்கு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி திடீர் கடிதம்!

"இதை உடனே பண்ணுங்க!" - முதலமைச்சருக்கு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி திடீர் கடிதம்!

கொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளதை அடுத்து, வழிபாட்டுத் தலங்களுக்குள் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் கடிதம் எழுதி உள்ளார்.

தலைநகர் டெல்லியில் கோரத் தாண்டவமாடிய கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை, அம்மாநில அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியதன் காரணமாக, குறைந்து வருகிறது. தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 50-க்கு கீழே பதிவாகி வருகிறது.

டெல்லியில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை கட்டுக்குள் வந்துள்ளதை அடுத்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை, ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். திரை அரங்குகள், வணிக வளாகங்கள், மதுபானக் கூடங்கள், பள்ளிகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad