அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சூப்பர் சலுகை; வாரி வழங்கும் மாநில அரசு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 6, 2021

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சூப்பர் சலுகை; வாரி வழங்கும் மாநில அரசு!

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சூப்பர் சலுகை; வாரி வழங்கும் மாநில அரசு!


ஆசிரியர்களின் கல்விக்காக மாநில அரசின் வெளியிட்டுள்ள அறிவிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
டெல்லியில் ஆசிரியர் தின கொண்டாட்டத்தை ஒட்டி, 122 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர்கள் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகப்படியான ஆசிரியர்கள் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், விரிவுரையாளரகள், DIET மற்றும் SCERT பயிற்றுநர்கள், கலை, இசை, விளையாட்டு ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் உள்ளிட்டோர் அடங்குவர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, கடந்த 5 ஆண்டுகளில் நமது மாநிலத்தை சேர்ந்த ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களை உயர்கல்விக்காக இங்கிலாந்து, பின்லாந்து, சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளோம். அங்கு உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் கற்பிக்கும் படிப்புகளை கற்றறிந்து வந்துள்ளனர். அந்தளவிற்கு ஆசிரியர்கள் மிகச்சிறந்த அறிவுடன் விளங்குகின்றனர்.
செலவை ஏற்கும் மாநில அரசு

நீங்கள் விண்ணப்பித்தால் உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் நிச்சயம் இடம் கிடைக்கும். அதற்கான அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ளீர்கள். இந்த விஷயத்தில் திறன் வாய்ந்த ஆசிரியர்கள் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். உலகின் 100 சிறந்த பல்கலைக்கழகங்களில் படிக்க தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு, அவர்களது படிப்பிற்கு தேவையான மொத்த செலவையும் மாநில அரசே ஏற்றுக் கொள்ளும்.ஆட்சியில் ஒரு வருசமா இருந்தீங்களே ? என்ன பண்ணீங்க ? - பொங்கி எழுந்த சேகர் பாபு!
திறமை வாய்ந்த ஆசிரியர்கள்

அடுத்த சில நாட்களில் இதுதொடர்பான வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். கொரோனா நிலவரம் குறித்து பேசுகையில், இந்தியாவில் முதல் லாக்டவுன் போடப்பட்டு ஓராண்டை கடந்து விட்டோம். கொரோனாவால் கல்வித்துறை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதனால் எவ்வாறு கற்றலை உறுதி செய்வது என்பது பற்றி தெரியாமல் இருந்தோம்.இத்தகைய கடினமான சூழலை ஆசிரியர்கள் திறம்பட எதிர்கொண்டு வந்துள்ளனர். கற்றல் ஒருபோதும் பாதிக்கப்படக் கூடாது என்பதை மனதில் வைத்துக் கொண்டு ஆசிரியர்கள் அக்கறையுடன் பணியாற்றி வருகின்றனர். அனைவரது உழைப்பையும் பாராட்டியே ஆக வேண்டும் என்று மணிஷ் சிசோடியா குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad