ஒரு வாரம் பள்ளிக்கு விடுமுறை: கொரோனா எதிரொலி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 6, 2021

ஒரு வாரம் பள்ளிக்கு விடுமுறை: கொரோனா எதிரொலி!

ஒரு வாரம் பள்ளிக்கு விடுமுறை: கொரோனா எதிரொலி!


கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக கல்வி நிறுவனங்கள் பல மாதங்களாக பூட்டப்பட்டிருந்தன. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டன.
9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையில் பிற வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகளை தொடங்குவது தொடர்பாக நாளை ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறக்கப்பட்டதிலிருந்து பல்வேறு ஊர்களில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று புதுக்கோட்டை மாவட்டம், முள்ளுக்குறிச்சி ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் பயின்று வரும் 2 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரம் மீட்டெடுக்கப்படும்!
கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்களுக்கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.

நோய்க்கான எந்த அறிகுறியும் இல்லாத நிலையில் இந்த மூன்று மாணவர்களுக்கும் பரிசோதனையின் போது நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக அந்தப் பள்ளிக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டது.திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை, இரட்டை வாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில், 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு நேற்று காலை கொரோனா நோய்த்தொற்று உறுதியானது. மாணவிக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியானதை அடுத்து, அந்த பள்ளிக்கு ஒருவாரம் விடுமுறை விடுவதாக பள்ளி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad