நீட் எழுதிவிட்டு வந்து தற்கொலை..! அரியலூரில் மாணவி எடுத்த தவறான முடிவு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, September 14, 2021

நீட் எழுதிவிட்டு வந்து தற்கொலை..! அரியலூரில் மாணவி எடுத்த தவறான முடிவு

நீட் எழுதிவிட்டு வந்து தற்கொலை..! அரியலூரில் மாணவி எடுத்த தவறான முடிவு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி. வழக்கறிஞராக உள்ளார். இவருக்கு கனிமொழி (17), கயல்விழி (19) என இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் 12ஆம் வகுப்பில் 562 மதிப்பெண் பெற்று பள்ளியிலேயே முதல் மாணவியாக வந்த கனிமொழி மருத்துவம் படிக்கும் கனவில் கடந்த ஞாயிற்று கிழமை
நீட் தேர்வு எழுதியுள்ளார்.
தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததால் அவர் சரியாக எழுதவில்லை எனக்கூறி தன்னுடைய தந்தையிடம் வேதனை பட்டுள்ளார். அப்போது, கருணாநிதி மகளை ஆசுவாசப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கனிமொழி இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வெளியில் சென்று வீட்டுக்கு வந்த பெற்றோர் கனிமொழி தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அலறி துடித்து கதறியுள்ளனர். பின்னர் சம்பவம் அறிந்து வந்த போலீசார் கனிமொழியின் சடலத்தை கைப்பற்றி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்மையில் சேலத்தை சேர்ந்த தனுஷ் என்ற மாணவன் நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இப்போது மேலும் ஒரு மாணவி உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பேரிடியை கொடுத்துள்ளது. இந்நிலையில், கனிமொழியின் மரணத்துக்கு எதிர்க்கட்சி தலைவர்எடப்பாட ி பழனிசாமி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அதில், ''நீட்தோல்வி பயத்தால் மாணவி அரியலூர் கனிமொழி மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரின் பெற்றோருக்கும் , குடும்பத்தார்க்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன், திமுக தனது அரசியல் நாடகத்தையும் , நீட் பயத்தால் மாணவர்கள் உயிரிழப்பதை வேடிக்கை பார்ப்பதை இனியாவது நிறுத்திவிட்டு, மாணவர்களின் நலன் கருதி உண்மை நிலையை மக்களுக்கும் மாணவர்களுக்கும் விளக்க வேண்டும்.

மாணவர்கள் இனி இது போன்ற முடிவுகளை எடுக்காமல் வாழ்க்கையில் எந்த தேர்வையும் துணிந்து எதிர் கொள்ள வேண்டுமென உங்கள் உற்றார்களில் ஒருவனாக கேட்டு கொள்கிறேன்'' என இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad