விநாயகர் சதுர்த்தி தடை: அரசின் உத்தரவில் தலையிட முடியாது - உயர் நீதிமன்றம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 8, 2021

விநாயகர் சதுர்த்தி தடை: அரசின் உத்தரவில் தலையிட முடியாது - உயர் நீதிமன்றம்!

விநாயகர் சதுர்த்தி தடை: அரசின் உத்தரவில் தலையிட முடியாது - உயர் நீதிமன்றம்!

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும், நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கும் அனுமதி கிடையாது.

ஆனால், விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக தனி நபர்கள் தங்களது இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாகச் சென்று அருகிலுள்ள நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இக்கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்புக்கு இந்து அமைப்புகள், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த உத்தரவை சுட்டிக் காட்டி அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும், பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்து செல்லவும் அனுதிக்க வேண்டும் என்று கோரி சென்னையை சேர்ந்த இல.கணபதி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.


இந்த வழக்கானது தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குறைந்தபட்சம் 5 பேராவது அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, மதஉரிமைகளை பின்பற்ற வாழ்வாதார உரிமை முக்கியமானது. பொதுநலன் கருதியே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad