தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 13, 2021

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 13ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து 14ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 2021-2022ஆம் நிதி ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கை ஆகியவற்றின் மீதான பொது விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்றது.


அதன் தொடர்ச்சியாக, கடந்த 23ஆம் தேதி முதல் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. விவாதங்களுக்கு துறை சாா்ந்த அமைச்சா்கள் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டனா். சட்டப்பேரவை 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். மேலும் சட்டத்திருத்த மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி வரை மொத்தம் 29 நாட்களுக்கு கூட்டத்தொடரை நடத்துவது என்று அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், ராஜ்யசபா தேர்தல் தேதி அறிவிப்பு, கொரோனா உள்ளிட்டவைகளால் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முன்கூட்டியே அதாவது செப்டம்பர் 13ஆம் தேதி நிறைவுபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

அதன்படி, தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது. காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் தொடா்ச்சியாக மூன்று நாள்கள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை திங்கள்கிழமை காலை மீண்டும் கூடியது.

கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று நீட் தோவை ரத்து செய்யும் சட்டத் திருத்த மசோதா, உள்பட 20 முக்கிய சட்டத்திருத்த மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு பெற்றதும், அவையை சபாநாயகர் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad