தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 13, 2021

தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டில் ஊரகப் பகுதிகளுக்கு மட்டும்
உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களுக்கு மட்டும் மாவட்ட மறுசீரமைப்பு காரணமாக தேர்தல் நடைபெறவில்லை.

இது தொடர்பான வழக்கில் தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, அதற்கான பணிகளை மாநில தோதல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. அதன்படி, ஊரக உள்ளாட்சித் தோதலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, மேற்கண்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ஆம் தேதி நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும், வெற்றி பெற்றவர்கள் அக்டோபர் 20ஆம் தேதி பதவியேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad