''எனக்கு வரன் வேண்டும்'', ஒரே ஒரு விளம்பரம், வெளிநாடு வரை குவியும் அழைப்புகள்..!
மக்கள் தங்கள் வாழ்க்கை துணையை கண்டுபிடிக்க உள்ளூர் தரகர் முதல் தற்போதுள்ள மேட்ரிமோனியல் வசதி வரை பல வழிகளை அணுகி வருகின்றனர். அதிலும், ஜாதகம், சாதி, மதம் என அனைத்தும் பொருந்தி வரன் அமையும் வரை போராட வேண்டியுள்ளது. இதற்கு மத்தியில் சாதாரண விளம்பர பலகை மூலம் உள்ளூர் முதல் வெளிநாடுகள் வரை வரன் தொடர்பான அழைப்புகளை பெற்று வருகிறார் கேரளா வல்லாச்சிராவை சேர்ந்த
உன்னிகிருஷ்ணன் (33).தேநீர் கடை நடத்தி வரும் உன்னிகிருஷ்ணன் திருமணத்திற்கு நீண்ட நாட்களாக வரன் தேடி வந்துள்ளார். ஜாதகம், சாதி, மதம் என முறையாக வரன் பார்த்து வந்தும் அவருக்கு வரன் அமையவில்லை. இதனால், ஒரு முடிவெடுத்த உன்னிகிருஷ்ணன் ''
எனக்கு வரன் தேவை, சாதி, மதம் பேதமில்லை என்று ஒரு பலகையில் எழுதி டீ கடையில் அதை கட்டி தொங்கவிட்டார். இதை கவனித்த அவரது நண்பர் உன்னிகிருஷ்ணனையும் அந்த பலகையையும் சேர்த்து புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.
அதன்பிறகு என்ன நடந்தது என்பதை உன்னிகிருஷ்ணன் கூறியதாவது, "நான் தினசரி கூலி வேலை செய்பவனாக இருந்தேன். எனது தலையில் ஒரு கட்டி வளர்ந்தது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு நான் முழுமையாக குணமடைந்ததால், திருமண வாழ்வில் செல்ல நினைத்தேன். அது என் வீட்டிற்கு அருகில் ஒரு லாட்டரி கடையைத் திறக்க வழிவகுத்தது.
சில நாட்களுக்குப் பிறகு, ஒரு தேநீர் கடையை அமைத்தேன். வியாபாரமும் நன்றாக நடந்து வருகிறது. இப்போது, எனக்கு ஒரு வாழ்க்கைத் துணை மட்டுமே தேவை, அதற்காக ஒரு தரகரை அணுக விருப்பமில்லை. ஜாதகம்,
சாதி ஆகியவற்றை வைத்து என் சார்பாக என் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஏற்கனவே வரன் தேடினார்கள், ஆனால் எந்த பொருத்தமும் நடக்கவில்லை. இதனால், எனது தேநீர் குடிசைக்கு முன்னால் ஒரு விளம்பர பலகையை தொங்கவிட நினைத்தேன்,
அந்த புகைப்படத்தை எடுத்து எனது நண்பர் முகநூலில் ஷேர் செய்தார். அதனால், தொலைதூர நாடுகளில் வாழும் மலையாளிகளிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. மேலும், என்னை வாழ்த்துவதற்காகவும் நிறையே பேரிடம் இருந்து அழைப்புகள் வருகின்றன என்று கூறும் உன்னிகிருஷ்ணன் பல அழைப்புகளுக்கு பதிலளிக்க நேரம் கிடைக்கவில்லை என்றும் கூறினார். விரைவில் உன்னிகிருஷ்ணனின் திருமண செய்தியும் வரும்.
No comments:
Post a Comment