பள்ளிகள் திறப்பு; எல்லாம் சரியாத் தான் நடக்கிறதா? அமைச்சர் செய்த காரியம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 2, 2021

பள்ளிகள் திறப்பு; எல்லாம் சரியாத் தான் நடக்கிறதா? அமைச்சர் செய்த காரியம்!

பள்ளிகள் திறப்பு; எல்லாம் சரியாத் தான் நடக்கிறதா? அமைச்சர் செய்த காரியம்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதையொட்டி ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. பின்னர் படிப்படியாக குறைந்து வந்த நோய்த்தொற்றை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு அக்டோபர் முதல் பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து பகுதியளவு மட்டும் சில மாநிலங்கள் பள்ளிகளை திறந்தன. ஆனால் இரண்டாவது அலை தொடங்கியதால் மீண்டும் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. கடந்த மே மாதம் தினசரி தொற்று 4 லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்டது. அதன்பிறகு படிப்படியாக குறைந்து 50 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது. நேற்று புதிதாக 45,975 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. 35,091 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பள்ளிகள் திறப்பு

507 பேர் பலியாகி இருக்கின்றனர். தற்போது 3,82,934 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக மேல்நிலை வகுப்பு மாணவர்கள் மட்டும் வரவழைக்கப் பட்டுள்ளனர். தலைநகர் டெல்லியில் 9-12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. வகுப்பறைகளில் போதிய சரீர இடைவெளி விட்டு அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 9-12 வகுப்பிற்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

கொரோனா கட்டுப்பாடுகள்

மாநகரப் பேருந்துகளில் பள்ளிச் சீருடை மற்றும் அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக பள்ளிக்கு பயணம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ராஜஸ்தான், புதுச்சேரியிலும் 9-12ஆம் வகுப்பிற்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தெலங்கானாவில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அசாம் மாநிலத்தில் 10-12 வகுப்பிற்கும் மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஹரியானாவில் 4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இவர்கள் பெற்றோரிடம் இருந்து ஒப்புதல் கடிதத்தை பெற்று வர வேண்டும்.


மத்திய அமைச்சர் ஆய்வு

மத்தியப் பிரதேசத்தில் 6-12 வகுப்பிற்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் திறப்பை ஒட்டி ஆசிரியர்கள், ஊழியர்கள், பெற்றோர், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டதை தொடர்ந்தே பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மூத்த அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அதில், பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறப்பட்டதை அடுத்து நிலைமை எப்படி இருக்கிறது.

No comments:

Post a Comment

Post Top Ad