விஜயகாந்துடன் ஏன் பிரேமலதா துபாய் செல்லவில்லை?
தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகஸ்ட் 30ஆம் தேதி சிகிச்சைக்காக துபாய் சென்றார். சென்னை விமான நிலையத்தில் விஜயகாந்தை, அவரது உதவியாளர்கள் வீல் சேரில் வைத்து வேகமாக தள்ளிக் கொண்டே செல்லும் வீடியோ வெளியாகி அவரது ரசிகர்கள், தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விஜயகாந்துடன் அவரது மகன் சண்முக பாண்டியன் சென்றுள்ளார்.
சிகிச்சையின்போது விஜயகாந்தை அருகிருந்து பார்த்துக் கொள்ள ஏன் பிரேமலதா
செல்லவில்லை? உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் பிரேமலதா செல்லவில்லையா என்றெல்லாம் கேள்விகளும் யூகங்களும் எழுந்தன. பிரேமலதா விஜயகாந்தோடு செல்லாததற்கு ஒரே காரணம் அவரது பாஸ்போர்ட் தான்.
திருநெல்வேலி காவல் துறையால் 2017ஆம் ஆண்டு தொடரப்பட்ட குற்ற வழக்கு மறைக்கப்பட்டிருக்கிறது எனக்கூறி பாஸ்போர்ட் அதிகாரி பிரேமலதாவின்பாஸ்போர்ட்டை சரண்டர் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார். அதனால் பிரேமலதாவும் தன்னுடைய பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார்.
இதை எதிர்த்து பிரேமலதா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் முன்பு நடைபெற்றது. பிரேமலதா சார்பில் மூத்த
வழக்கறிஞர் பி. வில்சன் ஆஜராகி, திருநல்வேலி காவல்துறையால் தொடரப்பட்ட குற்ற வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திலிருந்து எந்த ஒரு சம்மனும் வரவில்லை என்றும், வழக்கு தொடர்பாக எந்த தகவலையும் மறைக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
No comments:
Post a Comment