கோவை: இந்த ரோட்ல எவ்வளோ விபத்து? தடுக்க வலியுறுத்தும் தமமுக!
உக்கடத்தில் சாலை விபத்துக்களைத் தவிர்க்க சிக்னல் அமைக்கக்கோரி தமுமுகவினர் கோவை மாநகர போக்குவரத்து காவல்துறைக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து தமமுக அளித்துள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது :
உக்கடத்தில் இரண்டு ஆண்டுகளாக மேம்பாலம் கட்டும் பணி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே தற்போது உக்கடம் காவல் நிலையம் அருகில் தார்ச்சாலை
அகலப்படுத்தியுள்ள நிலையில், தினந்தோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் இந்த வழியைக் கடந்து வருகிறார்கள்.
இங்குத் தினம்தோறும் விபத்துகள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. பெண்கள், முதியவர்கள், மாணவ-மாணவிகள் எனப் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சாலையைக் கடக்க முடியாமல் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதன் காரணமாக உக்கடம் காவல் நிலையம் அருகில் பழைய சிக்னலிருந்த இடத்தில் மீண்டும் சிக்னல் அமைக்க வேண்டும். அப்படி அமைத்தால் விபத்துகளைத் தவிர்க்கலாம். பொதுமக்களும் சாலையைக் கடந்து செல்வது எளிதாக இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment