சேலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்... அதிர்ச்சியில் பறிகொடுத்தவர்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 20, 2021

சேலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்... அதிர்ச்சியில் பறிகொடுத்தவர்கள்!

சேலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்... அதிர்ச்சியில் பறிகொடுத்தவர்கள்!

சேலம் மாநகர காவல்துறை சார்பில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை சட்டத்தின்படி குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல் ஹோடா உத்தரவின்படி பொது ஏலம் விடப்படும் என்று கடந்த 6ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் சேலம் குமாரசாமிப்பட்டி மைதானத்தில் இன்று பொது ஏலம் விடப்பட்டது. மாநகர கூடுதல் காவல் ஆணையாளர் கும்மராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் காவல் ஆய்வாளர் கற்பகம் மற்றும் மதுவிலக்கு தனிப்பிரிவு காவல் துறையினர் கலந்து கொண்டனர் மாநகர சார்பின் இரண்டு சக்கர வாகனம் ஏழு ஆட்டோ ஒன்று நான்கு சக்கர வாகனம் ஐந்து என மொத்தம் பதிமூன்று வாகனங்களும் ஏலம் விடப்பட்டது.

இதேபோல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் அவர்களின் உத்தரவின்படி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை சட்டத்தின்படி பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு மூன்று நான்கு சக்கர வாகனங்கள் 103ஐ ஏலம் இன்று விடப்பட்டது.

மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொற்செழியன் தலைமையில் நடைபெற்ற ஏலத்தின் மதுவிலக்கு தனிப்பிரிவு துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் மேற்பார்வையில் கலால் உதவி ஆணையாளர் தனலிங்கம் முன்னிலையில் அரசுப் பணிமனை பொறியாளர் மதிப்பீட்டின்படி இரண்டு மூன்று நான்கு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்பட்டது.



மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 116 வாகனங்களை எடுப்பதற்காக இரண்டு மூன்று நான்கு சக்கர வாகனங்களுக்கு ஏற்கனவே முன் பணம் கட்டிய 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஏலம் விடப்பட்ட வாகனங்களை அவரவர் விருப்பத்திற்கேற்றவாறு ஏலத்தில் வாகனத்தை எடுத்து மீதி தொகையும் செலுத்திவிட்டு வாகனங்களை வாங்கியும் சென்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad